ரயிலில் சிக்கி மூதாட்டி பலி

விருத்தாசலம்: திருச்சி பாசஞ்சரில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார்.

கடலுார் – திருச்சி பாசஞ்சர் ரயில், நேற்று காலை வாளாடி – பிச்சாண்டவர் கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே காலை, 10:00 மணியளவில் சென்ற போது, 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ரயிலில் சிக்கி உடல் நசுங்கி பரிதாமாக இறந்தார்.

விசாரணையில், லால்குடி அடுத்த மேலவாளாடி கிருஷ்ணன் மனைவி பழனியம்மாள், 91, என்பது தெரிந்தது. விருத்தாசலம் இருப்புப்பாதை இன்ஸ்பெக்டர் பிருந்தா வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement