129 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தல்; கள ஆய்வு நடத்தி பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
சென்னை: ''கள ஆய்வில் 129 டாஸ்மாக் மதுபான கடைகள், கோவில்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகில் உள்ளது. இதனை தவெக அரசு உடனடியாக மூட வேண்டும்'' என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, 'வீ தி லீடர்ஸ்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில், ஜூலை முழுவதும், போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில், அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் அமைப்பினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
போதைப்பொருளுக்கு எதிராக, அண்ணாமலை ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் தனது முதல் மாநாட்டை நடத்தினார். தற்போது தனது அமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தி 129 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டு, அதை உடனடியாக மூட அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவர் தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் விஜயின் கவனத்திற்கு, 'வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்' நடத்திய கள ஆய்வை கொண்டு சென்றோம்.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பஸ் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்.
இந்தக் கடைகளை உடனடியாக மூடுமாறும், நமது குழந்தைகள் கற்கும், பிரார்த்தனை செய்யும் மற்றும் பயணம் செய்யும் இடங்களைப் பாதுகாக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
சிறப்பு வீடியோ!
பள்ளி, கோவிலுக்கு அருகே 129 மதுக்கடைகள்; பட்டியல் வெளியிட்டு அண்ணாமலை மூட வலியுறுத்தல் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இது பழைய படம். இப்போது அவர் வீட்டுக்கு வெளியில் பகுத்தறிவுவாதி.விபூதியை வீட்ல பூட்டி வைத்தவர். டுபாக்கூர்
தேர்தல் முடிந்துவிட்டது. இனி ஆய்வு செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? ஐந்து ஆண்டுகள் கழித்து மக்களின் தீர்ப்பைப் பார்த்துக் கொள்ளலாம். அதுவரை டெல்லியில் உங்களுக்கு எந்த வேலையும் இல்லை
புகை பிடித்தல், குதிரை பந்தயம், கள், சாராயம், லாட்டரி... முற்றிலும் தடை. ஏன் என்றால் இதன் தொழில் அதிபர்கள் திராவிடர் கிடையாது. மது பான உற்பத்தி திமுக, அண்ணா திமுக நிறுவனம். பாதி கடை மூடினாலும் மீதி கடை நாடி மது பிரியர் செல்வர். டாஸ்மாக் முற்றிலும் மூட முடியும். குடி மக்கள் மறந்து விடுவர். தன் கட்சியினர் இது போன்ற தொழிலில் ஈடுபடுவது கடினம். கட்சி வளர்ச்சி பெறும். திராவிடம் தேயும்.
காவேரி குறித்து கள ஆய்வு நடத்தி தண்ணீர் தொறக்க வையுங்களேன். உறுப்படாத டாஸ்மாக் ஆய்வு.
ஆட்சியில் இருந்து நன்றாக சம்பாதித்தது விடியல் ...விடியல் காவேரி கள ஆய்வு நடத்தி தண்ணீர் பிரச்னையை தீர்க்கட்டுமே ..
டாஸ்மாக் மூடிட்டாங்களா..
அண்ணாமலை அண்ணன் சொன்ன வார்த்தைகள் கரெக்ட் அனைத்து மதுபான கடைகளை மூட வேண்டும் ஜெய்ஹிந்த் அண்ணாமலை ஐபிஎஸ் வரவேற்கிறோம் தமிழ்நாடு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் அது அண்ணாமலைக்கு வாய்ப்புகள் தரும்
நடக்காது
திருமணமாகாத வர்கள், குடிகாரர்கள் இவர்களுக்கு வீடு வாடகைக்கு விடமாட்டார்கள்.... ஆனால் இன்று பண அடிமைகளுக்கு காசு வந்தால் போதும் என்ற சூழல்... கலாச்சாரம் எல்லாம் சர்வ நாசம் ஆகிவிட்டது..... அலை பாயும் மனதை அடக்கினால் மது கடைகள் தானாகவே மூடிவிடும்.... அரசு மானிய விலையில் மது விற்கும் காலம் வெகு விரைவில் வரும்....
அண்ணாமலை sir, மறைமலை நகர் Melrosapuram பகுதியில் உள்ள TASMAC கடையை மூட உதவுங்கள்....
தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை செய்யும் பல பெண்கள் சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்கு முழு போதையில் சுற்றுகிறார்கள் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதை பார்க்க முடியும்.... தனியார் மதுக்கூடங்களில் வெள்ளிக்கிழமை பெண்களுக்கு மட்டும் குடிக்கும் சரக்கு பாதி விலையில் தருகிறார்கள்.... காலை 11 முதல் மாலை 5 வரை ஒன்று அடித்தால் ஒன்று இலவசம் இது மகிழ்ச்சியான நேரம்.... ஊத்திக் கொடுக்கும் பகுதி நேர பணியாளர்கள் பலர் படிக்கும் மாணவர்கள்..... விவசாயிகள் கள்ளு இறக்க அனுமதி உண்டா?
மலை சார் உய் தி லீடர்ஸ் கம்பெனியை டிவிகே யுடன் சங்கமிக்க செய்துவிடுங்கள். உங்களுக்கு சிறப்பான எதிர்காலம் அங்கு மட்டுமே கிடைக்கும்.
அதுக்கு வாய்ப்பு இல்லை அண்ணாமலை நல்ல குடும்பத்தில் பிறந்தவர் அவர் மனைவி மற்றும் மகன்களை பிரியாதவர் அவர் ஏக பத்தினி விரதன். ஆனால் ஜோசப்???
குடித்துவிட்டு கோவிலில் சாமி கும்பிடும் பக்தர்கள் உண்டு, குடித்துவிட்டு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உண்டு, குடித்துவிட்டு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அநேகம் இருக்கிறார்கள்... என்ன செய்யலாம்? மனித உடலில் வெள்ளை அணுக்கள் சிவப்பு அணுக்கள் இருக்கிறதே இல்லையோ, கண்டிப்பாக எத்தனாலும், ஆல்கஹால் இருக்கும்... குடிகாரனைப் பார்த்தால் இன்றும் பலர் பயந்து நடுங்குகிறார்கள், நமக்கு எதற்கு வம்பு என்று அந்த இடத்தை காலி செய்கிறார்கள் இது பலருக்கு பிடித்திருக்கிறது விடாமல் அடித்து தன்னை பெரிய வீரன் போல் காட்டிக் கொள்கிறார்கள்....மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்