அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? ஸ்டாலின் கேள்வி
சென்னை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? என முதுல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர்; தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்த காலத்தில் நாம் பெற்ற படிப்பினை.
உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழகத்தை ப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழகத்தின் புதிய முதல்வர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் "நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்" என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள்.
இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழகத்தில் உள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழகத்தின் உயிர்ப் பிரச்னையான காவிரி விவகாரத்தை முதல்வர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும்.
நமது முதல்வர் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
https://www.youtube.com/live/sbhUdR50XC0?si=aU6EuedM8Mm5IVNH
இவர் முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றும் செய்யவில்லை. இப்ப என்ன திடீரென்று தமிழகத்தின் மீது அக்கறை? காவிரிநீரை வரவழைக்க அணைத்து கட்சி கூட்டத்தை கூட்டவேண்டுமாம்
முடியவே முடியாது.
முடியாது...?
திமுக தனது ஆட்சிக் காலத்தில், முக்கியமான பிரச்சினைகளில் எத்தனை முறை எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியது என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஊருக்கு உபதேசம் செய்வதில் திமுக வுக்கு நிகர் வேறு எந்த ஒரு கட்சியும் இல்லை.
திராவிட கட்சிகளுக்கு சமாதானமான முறையில் எதையும் பேசவே தெரியாதா?, எதற்கெடுத்தாலும் வாக்குவாதமும் சண்டையும்தானே?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினால் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வந்து விடுமா. சும்மா பொழுது போகுவதற்கு அனைத்து கட்சி கூட்டம். உங்கள் ஆட்சியில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி எண்ணத்தை சாதித்து விட்டீர்கள்.
கூடலேன்னா அலுதுருவேன்
காவிரி பிரச்சனை எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் இருக்கு .இதை வச்சே காலம் தள்ளியாச்சு. அணைத்து கட்சி கூட்டி ஒரு மண்ணும் ஆக போறது இல்லை.
கட்சி தேர்தல் தோல்வி காரணம் கண்டுபிடித்த பின்னர் கூட்டலாம் உட்கட்சி தேர்தல் முடியட்டும் இடைத்தேர்தல் தேர்தல் தேதி தெரியட்டுமே
ஏன் கூட்ட வேண்டும்? ஒவ்வொருவராக பேசியதையே திரும்ப பேசுவதற்கு பஜ்ஜி, போண்டா ஒரு கேடா?மேலும்
-
பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
-
சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
-
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
-
பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
-
ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
-
கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்