பிரதமர் மோடி பற்றி அருவருக்கத்தக்க பேச்சு; வாய்க்கொழுப்பில் பேசிய பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ

111


-நமது நிருபர்-




பிரதமர் மோடி பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய நொய்டா மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பெண், ''நான் என் தவறை உணர்ந்து கொண்டேன். நான் செய்தது தவறு; நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'', என்றார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு பிரச்சனையை முன்வைத்து டில்லியில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், சமூக விரோதிகள், குற்ற பின்னணி கொண்டவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கலவரத்தை ஏற்படுத்தினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தாக்கப்பட்டனர். அரசு வாகனங்கள் உடைத்து நொறுக்கப்பட்டன.


வீடியோ




இந்த சம்பவங்களின் போது, தேசவிரோத கோஷங்களை ஒரு கும்பல் எழுப்பியது. அதில் பெண் ஒருவர், டிவி நேரலை ஒளிபரப்பில் பிரதமர் மோடிக்கு எதிராக அருவருக்கத்தக்க வகையில் கோஷங்களை எழுப்பி வசை பாடினார்.
பிரதமருக்கு எதிராக அந்தப் பெண் பேசுகிறார் என்பதால், அவரது அருவருக்கத்தக்க பேச்சின் வீடியோவை எதிர்க்கட்சியினர் தங்களால் முடிந்தவரை சமூக வலைதளங்களில் பரப்பினர்.

கேட்கவே நா கூசும் வகையிலும், அச்சில் ஏற்ற முடியாதபடியும் இருந்த அவரது வசை, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீஸ் விசாரணையில் குறிப்பிட்ட அந்தப் பெண் உ.பி., மாநிலம் நொய்டாவில் ஒரு சலூனில் வேலை பார்ப்பவர் என்றும், பெயர் ருச்சிதா சிங், 25, என்றும் தெரியவந்தது. தான் பேசிய வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து உஷாரான அந்தப் பெண்ணும் அவரது குடும்பத்தினரும் மூன்று நாட்களாக தலைமறைவாகி விட்டனர்.


மன்னித்து விடுங்கள்




அந்தப் பெண் பேசிய, அருவருக்கத்தக்க, சட்டவிரோத பேச்சுக்காக நொய்டா போலீசார் மூன்று சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பின்னர் டில்லி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று நொய்டாவில் பதுங்கியிருந்த அந்தப் பெண்ணை போலீசார் விசாரித்தனர்.


அப்போது அந்த பெண் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். வீடியோவில் அந்த பெண் கூறியதாவது: போராட்டத்தின்போது சிலரின் தூண்டுதலுக்கு ஆளாகி, பிரதமருக்கு எதிராகப் பல மோசமான கருத்துகளைக் கூறினேன். எனக்கு 15 வயதுதான் ஆகிறது. நான் செய்தது மன்னிக்க முடியாத செயல். நான் பல மோசமான விஷயங்களைப் பேசிவிட்டேன்

இதுவே எனது முதல் மற்றும் கடைசித் தவறு. நான் ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கோருகிறேன். எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. என்னால் என்னையே பார்க்க முடியவில்லை. தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.
இவ்வாறு வாய் கொழுப்பில் பேசிய பெண் மன்னிப்பு கோரியுள்ளார்.


@block_Y@

திருந்துங்கள்!

நாட்டுக்காக பணியாற்றும் தலைவர்களை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அவர்களால் நம்மை எதுவும் செய்ய முடியாது என்று வாய்க்கொழுப்பில் பேசிய அந்தப் பெண் இப்போது சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீதான கடும் நடவடிக்கையே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு ஒரு பாடமாக இருக்கும்.

பிரதமருக்கு எதிராக பொய்களை பரப்புவதும், அவதூறு வீடியோக்கள் வெளியிடுவதும் நமக்கு நிறைய நல்ல உறவுகள் கிடைக்கக்கூடும் என்று சிலர் இத்தகைய வேலையை செய்கின்றனர். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. மற்ற இளைஞர்கள் பிரதமர் மோடி மீதான தங்கள் வெறுப்பை மாற்றிக்கொள்ளட்டும். block_Y



@block_P@

பெருந்தன்மை கொண்ட பிரதமர்!

தன் மீது அவதூறு பரப்பினாலும் பெருந்தன்மையுடன் பிரதமர் மோடி மன்னித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், '' டில்லி ஜந்தர் மந்தரில் என்ன நடந்தது என்பதை ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது. சரியான வழிகாட்டுதல் இல்லாத மாணவர்கள் என்னையும், என் தாயையும் அவதுாறாக பேசினர்.

இளமையில் தவறு செய்வது இயல்பு. அதே பருவத்தில் தான், தவறை திருத்திக் கொள்ளவும் வாய்ப்புகள் அமையும். இந்த இளைஞர்களை நல்வழிப் படுத்த வேண்டியது நம் கடமை. அவர்களை தண்டிப்பதோ, நீதிமன்றத்திற்கு இழுப்பதோ சரியான தீர்வாக இருக்காது. நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். இவ்வாறு மோடி கூறியுள்ளார். block_P


@block_G@

உண்மையான வயது என்ன?

நொய்டா போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் அந்த பெண்ணின் வயது 25 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மன்னிப்பு கோரும் வீடியோவில் அந்த பெண், தனக்கு 15 வயது மட்டுமே என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார்.

மைனர் வயது என்றால், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம் என்ற நோக்கத்தில், இவ்வாறு அவர் கூறலாம் என்ற சந்தேகத்தில் அவரது வயது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.block_G

Advertisement