பள்ளிகளில் அரசியல் கோஷம்; மவுனம் காக்கும் அதிகாரிகள்
சென்னை: தமிழகத்தில் த.வெ.க., அரசு பொறுப்பேற்ற பின், அரசு பள்ளிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக் கூறி, த.வெ.க.வினர் 'ரீல்ஸ்'கள் எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, பள்ளி வளாகங்களில், கல்விசார் செயல்பாடுகளை தவிர்த்து, அரசியல் நிகழ்வுகள் கூடாது என, பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
எனினும், தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும், அரசியல் சார்ந்த நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தமிழக கனிம வளத்துறை அமைச்சர் பிரபு, காரைக்குடியில் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, மாணவ, மாணவியர் அனைவரும், 'டி.வி.கே., டி.வி.கே.,' என, கோஷமிடும்போது, அவர் நடுவில் நின்று ரசிக்கும் வீடியோ வெளியானது. இதற்கு, பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளி வளாகங்களில், அரசியல் சார்ந்த செயல்பாடுகள் இருக்க கூடாது என, எச்சரித்த பின்பும், இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன.
இது தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும், மவுனம் காப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Enna koduma saravanan ithu.
அரசு பள்ளிகளில் ஜெபக்கூட்டம் ஜெபம் செய்யலாம், அரசியல் கோஷம் போடா கூடாதா . அது சரி என்றல் இதுவும் சரி.
ரசிகர்கள் கூட்டத்தை ஆட்சியில் அமரவைத்த அந்த உன்னத உள்ளங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
பள்ளிகளில் அரசியல் கோஷம் கூடாது
இன்று TVK ஆட்சியில் எந்தத் துறையிலும் அதிகாரிகள் லஞ்சம் வாங்க பயப்படுகிறார்கள்.
அமைச்சர்கள் எந்த லஞ்சமும் வாங்குவதில்லை. கடந்த திமுக, அதிமுக ஆட்சிகளை விட TVK ஆட்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
வயிற்றெரிச்சலில், "அது சரியில்லை, இது சரியில்லை" என்று நீங்கள் பேசலாம். ஆனால், திமுக, அதிமுக ஆட்சிகளை ஒப்பிடும்போது, TVK ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை என்பதே என் கருத்து.
முழு வீடியோவைப் பார்த்தவர்களுக்குத்தான் உண்மை புரியும். அமைச்சர் வரும்போது, மாணவர்கள் தன்னெழுச்சியாக "TVK TVK" என்று கோஷமிட்டால், அதற்கு அமைச்சர் என்ன செய்ய முடியும்?
இதை விஜய் கவனிக்க வேண்டும். இல்லையெனில் திமுகவுக்கு நேர்ந்த கதிதான். மாணவர்களை அரசியலுக்கு இருக்காதீர்கள். அவர்களை படிக்க விடுங்கள்.
இப்போது நம் குழந்தைகளை ரீல் ஆட்சியாளர்கள் வராத பள்ளியில் சேர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நல்ல மாற்றம்.
திராவிடத்தில் ஜெராக்ஸ் காபி
நல்ல பண்புகளை சொல்லி பாடங்களை நடத்தி மாணவர்களை நல் வழி படுத்தவேண்டும்மேலும்
-
கெடிலம் ஆற்றில் குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் பண்ருட்டியில் பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தல்
-
மற்றொரு பாகிஸ்தானாக மாறுகிறது வங்கதேசம்: ஷேக் ஹசீனா மகன் எச்சரிக்கை
-
கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது
-
ஓட்டல்கள் சங்க கூட்டம்
-
விடுமுறை நாளில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வெளிநபர்கள் பணி விசாரிக்க ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
-
மதுபானம் விற்ற இளைஞர் கைது