10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் முதல் 12 முதியோர் இல்லங்கள் வரை… தமிழக பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் என்னென்ன?
நமது சிறப்பு நிருபர்
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய திட்டங்கள் பின்வருமாறு:
* அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு
* மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி அமைக்கப்படும்.
* மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
* பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கும் அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* தமிழகத்தில் 12 மாவட்டங்களில் தலா 1 வீதம் 12 முதியோர் இல்லங்கள் அமைக்க ரூ.6.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
* அரசுப் பள்ளிகளில் காமராஜர் காலை உணவுத் திட்டம் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்; இதற்கு ரூ.710 கோடி ஒதுக்கீடு.
* அரசுப் பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் 5 லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலுடன் நவீன சைக்கிள் வழங்க ரூ.277 கோடி நிதி ஒதுக்கீடு
* ஆதரவற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 100% மானியத்தில் 30 ஆயிரம் பயனாளிகளுக்கு 5 ஆடுகள் வழங்கப்படும். இதற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு
* ஏஐ பல்கலை, சர்வதேச திறன் மேம்பாட்டு மையம், செமிகண்டக்டர் சோதனை ஆய்வகம் ஆகியவற்றுடன் கூடிய நாட்டின் முதலாவது பிரத்யேக ஏ.ஐ., நகரம் அறிவகம் என்ற பெயரில் அமைக்கப்படும்; பட்ஜெட்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்க, திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்கப்படும். ரூ.10 கோடி ஒதுக்கீடு
* சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்துக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு
* புதிய மாநில வீட்டுவசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம்; ரூ.3500 கோடியில் செயல்படுத்தப்படும்.
* வெற்றி மடிக்கணினித் திட்டத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
* அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* 2031ம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி அளிக்கப்படும்.
* 12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி; பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை வழங்கப்படும். வெற்றி திறன் பயிற்சித் திட்டத்துக்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
* ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்.
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் வெற்றி முனைவோர் திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு
* அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.131 கோடி ஒதுக்கீடு
* ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க மண்ணின் மகள் திட்டத்துக்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
* மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்கள் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நிறுவப்படும்.
* மூத்த குடிமக்களுக்காக தமிழகம் முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்களுக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு
* கருவுற்ற பெண்களுக்கான தாய் கேர் திட்டத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு
* புற்றுநோய் பராமரிப்பு மருத்துவமனைகள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* நிபுணத்துவ டாக்டர்களை கொண்ட 5 மையங்கள் அமைக்க ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு
* ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்க ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு
* தொழில் வளர்சிக்கான புதிய உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
* ஹஜ் பயண மானியம் ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* கூவம், அடையாறு ஆறுகள் உலகத்தரத்தில் மறு சீரமைப்பு செய்யப்படும். படகு சவாரி, நதிக்கரை நடைபாதை, பொழுதுபோக்கு வசதிகள் செய்யப்படும்.
* பள்ளிகளில் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளிக்க 1058 என்ற இலவச எண் அறிமுகம்; போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற செயலி உருவாக்கப்படும்.
* தனித்துவமான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை வடிவமைக்க கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகளை கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும்.
* ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்வதை நோக்கமாக கொண்டு, 10 ஒலிம்பிக் மையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும்.
* ஏஐ தொழில்நுட்பத்துடன் வழிகாட்டி 3.0 அறிமுகம் செய்யப்படும்.
* திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* அனைத்து இ-சேவை மையங்களும் இ சேவை 2.0 ஆக மேம்படுத்தப்படும்.
* வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டத்துக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
* காவிரி- வைகை- குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு
* பெண்ணையாறு- செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு மற்றும் தாமிரபரணி வைப்பாறு திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்ய ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
* நதிகள் மீட்பு திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
* காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள்; விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சாத்தியக்கூறு ஆய்வு செய்ய ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
* அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டம் அறிமுகம்; அடிப்படை காப்பீடு திட்டம் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக அதிகரிப்பு. இத்திட்டத்துக்கு ரூ.838 கோடி ஒதுக்கீடு
* ரூ.1,375 கோடி மதிப்பீட்டில் உலகத்தர நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்.
* வடபழனி - போரூர் இடையே விரைவில் மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும்; சென்னைக்கு 3 புதிய மெட்ரோ ரயில் தடங்கள் பரிந்துரை செய்யப்படும்.
* ஆன்மிகப் பயணிகளின் வசதிக்காக, திருக்கடையூர், நாகூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் ஓய்வு இல்லங்கள் நிறுவப்படும்; இதற்காக ரூ.60 கோடி ஒதுக்கீடு.
* தமிழக அரசு வாட்ஸ்ஆப் Chatbot சேவைகள் தற்போதைய 76 சேவைகளிலிருந்து 275 சேவைகளாக விரிவுபடுத்தப்படும்.
பிரத்யேக வீடியோ!
தவெக அரசின் முதல் பட்ஜெட்; முக்கிய அம்சங்கள் என்னென்ன?- தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
தமிழக அரசின் முதல் பட்ஜஜெட்டை மேலோட்டமாக பார்த்த போது பல விசித்திரமான திட்டங்களை காண முடிந்தது. 11ம் வகுப்பு மாணவனுக்கு தரப் போவது சைக்கிள் என்றால் ஹெல்மெட் ஏன்? முதுமையை தொட்டவர்களுக்கு பல சலுகைகளை அளித்தது வரவேற்க தக்கது என்றாலும் முதியோர் இல்லங்களை தொடங்குவது என்பது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை அதிகமாக்கும் செயலாக மாற்றாதா? அம்பேத்கார் அயல்நாடு கல்வி உதவி திட்டம் பற்றி சரியான விபரம் இல்லை. பல லட்சம் மாணவர்களும் இளைஞர்களும் தமிழகத்தில் தகுதிக்கு உரியவர்களாக இருக்கும் நிலையில் வெறும் 1.2 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் என்பதும் ஒரு லட்சம் வேலையற்ற இளைஞர்களுக்கு மட்டும் உதவி தொகை எப்படி சரியாகும். தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதி களில் தாய் மாமன் மோதிரம் அமல்படுத்தும் தேதியும் நிதியும் அறிவித்த அரசு திருமண பெண்ணுக்கு சகோதரனின் சீர் என்ற திட்டம் எப்போது தொடங்கப்படும் என்பதையோ அல்லது ஏதோ காரணங்களுகாகாக இரண்டாவது முறை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும் இது பொருந்துமா என்பதையும் விளக்கவில்லை. மெட்ரோ சேவை என்பது பெரு நகரங்களில் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் பகுதிகளுக்கே பொருந்தும். பெண்களுக்கு இலவச பயண திட்டம் அமல்படுத்திய போது சென்னை நகர மாநகராட்சி எல்லைகள் குறுகியதாக மாற்றபட்ட பிறகு நகரத்தின் எல்லைக்குள் வராமல் அருகில் இருக்கும் வேறு மாவட்ட பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை தர முடியாது என்பது நிதி அமைச்சருக்கு தெரியாதா? இப்படி ஒரு பிரச்சினை கர்நாடகத்தில் உருவானதால் தான் மாநில அரசு பெங்களூர் அருகில் இருக்கும் தும்கூர் மற்றும் ராம்நகர் நகர பகுதிகளை பெங்களூர் நகர எல்லைக்குள் வரும் பகுதிகளாக மாற்ற நினைத்துள்ளது.
சமீபகாலமா
சத்தம் : பலமா கேக்குது
1 கோடி, 5 கோடி இது எல்லாம் அந்தப்புரம் அம்மணிக்கு மேக்கப் செலவுக்கவே பத்தாது 8 கோடி மக்களுக்கும் எப்படி ? ஏமாத்து ராஜா ஏமாத்து , அரை வேக்காடு தமிழினங்களின் சாபம் தொடரும்
கவுண்டமணி சொன்ன காமெடி டயலாக் "அதான் விஞ்ஞானம்"..
12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித்தொகை கொடுக்கப்படும்,
அக, ரூபாய் 150 கோடி ஒதுக்கீடை வைத்து 13 லட்சம் பேருக்கு மாதம் மாதம் உதலித்தொகை கொடுக்கப்படும் என்றால், அதுவும் அதே விஞ்ஞானம்.
தமிழ்நாடு விரைவில் திவாலாவது உறுதி.
அதுக்குதான் இருக்கு அண்ணாதிமுக, திமுக வை குற்றம் சொல்ல.
AI city will just cause decline in water ground levels, cause water pollution and air pollution. Check the AI cities of world .
If you are polluting earth, consequences are very dangerous
நிதிச் சீர்திருத்தம் , நிதி மேலாண்மை பற்றி எதுவும் இல்லை.வேலை வாய்ப்பு புதிய தொழிற்சாலைகள் பற்றி எதுவும் இல்லை. 8 வழிச்சாலை இல்லை.பரந்தூரில் மாற்றுத்திட்டம் என்ன? கோயம்பேடு பேருந்து நிலையத்தை என்ன செய்வதாக உத்தேசம்? புதிய கலைக் கல்லூரி, திறன் மேம்பாடு பற்றி எதுவும் இல்லை.காற்றாலை மின் வண்டிகள் பற்றிய கொள்கை அறிவிப்பு இல்லை. இதை பட்ஜெட் என்று அழைப்பதே தவறு
It appears that the guy who prepared the budget has no knowledge on science. 5 crores was allotted for AI university, semiconductor research centre and global skill centre. How that is possible with 5 crores? Semiconductor has 3 stages of manufacturing which are front end processing, circuit printing and assembly and packaging. Each machine / software itself costs in crores. What about the Building cost, land cost, man power cost? It is apparently clear that the guy who prepared is just a foot loose have zero knowledge on semicon. Than AI university? Do they plan to offer ug/ pg degrees, research +++. Does the guy tried to understand the cost for the tems a d sub tems. Just a wording only. Cant they talk to any IIT professor? What prevents them to understand first? Nowadays youngsters are smarter and within no time they will figure out the hollowness.
இது எல்லாம் ஒரு பட்ஜெட். வேலைங்கீடும். தமிழ்நாட்டை முடிக்காம விடமாட்டிங்க.
வெற்றி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட வெத்து பட்ஜெட் இது உறிக்க உறிக்க வெங்காயத்தில் ஒன்றுமே இருக்காது அதுபோல பட்ஜெட்டை படித்து பார்த்தால் ரீவ்ஸ் பட்ஜெட்டாக உள்ளது வேலை வாய்ப்புகள் பற்றி எந்தவொரு சமிக்ஞைகள் கூட இல்லை முழுக்க முழுக்க தனியார் வசம் எல்லா துறைகளையும் ஒப்படைக்க போவதாக உள்ளது திருட்டு லாட்டரி வித்தவன்தான் இதுவரை பல ஆயிரம் கோடிகளை கட்சிக்காக செலவு செய்துள்ளான் தனியார் வசம் எல்லா துறைகளும் போனால் இந்த திருட்டு லாட்டரி வித்தவன்தான் பினாமிகள் பெயரில் டென்டர் எடுப்பான் 11 ஆவது படிப்பவர்களுக்கு மட்டும் சைக்கிள் என்றால் அது அடுத்த தேர்தலில் ஓட்டு பிச்சை எடுக்க செய்யும் தில்லாலங்கடி வேலை நீர் மேலாண்மைக்காக எதுவும் பெரிதாக இல்லை இப்பவே 3 மாதங்களில் 20 ஆயிரம் கோடி கடன் வாங்கியாச்சு ஆட்சிக்கு வரும்போது கடன்களை குறைப்போம் என்றானுகள் இன்று நிதித்துறை செயலாளர் சொல்கிறார் இன்னும் 1.77 ஆயிரம் கோடி கடன் வாங்கப்படும் என்று இன்னும் 50 ஆண்டுகள் கடன் வாங்கித்தான் சமாளிக்க முடியும் என்று சொல்கிறார் வாங்கிய கடனுக்கு வட்டிகுகு எவ்வளவு என்று தெளிவாக இல்லை தாய்மாமன் சீர்க்கு எப்படி இந்த சொற்ப தொகை உதவும் என்று தெரியவில்லை பள்ளிகளில் சூப்பர் கிளீன் திட்டத்திற்கும் தொகை சொற்பமே கல்வித்துறையில் 4300 கோடியை போன ஆட்சியில் ஒதுக்கியதை விட குறைத்துள்ளார்கள் சுற்றுலா துறையில் நிதி ஒதுக்கீட்டில் கன்னியாகுமரிக்கு என்று எதுவும் இல்லை மாணவர்கள் திறன் வளர்ப்புக்கென்று ஒன்றுமே இல்லை இன்னும் பல ஓட்டைகள் உள்ளது என்னால் எல்லாவற்றையும் குறிப்பிட முடியவில்லை ஆக மொத்தம் இது வெற்றி பட்ஜெட் கிடையாது வெறும் வெத்து ரீல்ஸ் குப்பை பட்ஜெட்மேலும்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்
-
துவரையில் முழு மரபணு வரிசைமுறை கண்டுபிடிப்பால் புது ரகங்கள் வர வாய்ப்பு
-
தினமலர் சொன்னது; அரசு செய்தது; செயற்கையிழை ஆடை உற்பத்தி மேம்பட பின்னலாடை நகரில் தொழில்நுட்ப மையம்
-
சேவைகள் துறை வளர்ச்சி ஜூலையில் மிக குறைவு