பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வு; அமைச்சர் ராஜ்மோகன்
சென்னை: வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: வெற்றிக்கழக பட்ஜெட்டே பள்ளிக்கல்விக்கு உண்மையான நிதி உயர்வை தந்துள்ளது. 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு ஒதுக்கப்பட்ட நிதி 46,767 கோடி ரூபாய். இதில், இடைக்கால பட்ஜெட்டுக்கு முன்பு வரை செலவிடப்பட்ட தொகை 42,351 கோடி ரூபாய் மட்டும் தான்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், பல ஊதிய வரம்புகளையும், செலவினங்களையும் மிகை மதிப்பீடு செய்து திமுகவின் கடைசி பட்ஜெட்டான 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 48,534 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டது.
அதாவது, 2025-26 முழுமையான ஆண்டு பட்ஜெட்டில் உண்மையாக செலவு செய்யப்பட்டதைவிட 6003 கோடி ரூபாய் காரணமே இல்லாமல் உயர்த்தப்பட்டது. காரணமற்ற இந்த உயர்வுக்கு பின்னால் இருந்தது தவறான கணக்கீடுகளும், தேவையற்ற நிதி உயர்வுகளும் மட்டுமே.
வெற்றிக்கழக ஆட்சி அமைந்ததும் அதை முறையாக சரிசெய்து, காரணமற்ற நிதி உயர்வுகளை குறைத்து, 2025-26 திமுக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு செலவிடப்பட்டதைவிட 2176 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிதித்துறை செயலாளர் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். வெற்றிக்கழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள இந்த 44,527 கோடி ரூபாயை முதல்வரின் வழிகாட்டுதல் படி திறம்பட கையாண்டு, முழுமையான பலன்கள் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பள்ளிக்கல்வி நிர்வாகத்தையும் சென்று சேரும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த உண்மையான கூடுதல் ஒதுக்கீடு, பள்ளிக்கல்வித்துறையின் மேன்மையான லட்சியங்களை முழுமையாக நிறைவேற்றும். இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2)
panneer selvam - Dubai,இந்தியா
05 ஆக்,2026 - 18:00 Report Abuse
It is strange Tamilnadu government is spending nearly 40,000 crores per annum on School Education, but people are keen to join only private schools not government run schools . What is the reason ? ? No use in throwing away the people s money into drain 0
0
Reply
மேலும்
-
மேம்பாலத்தில் இருந்து விழுந்த 'குடி'மகன் சாவு
-
போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
-
ரயில்வே ஸ்டேஷன் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்
-
பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு ஆடித்திருவிழா களைகட்டியது
-
பொக்லைன் ஆப்பரேட்டர் தற்கொலை மனைவி புகாரால் விசாரணை
-
இ - சேவை மையங்களில் 'சர்வர்' பிரச்னை நகர் பகுதியில் அரசு சேவை பெறுவதில் சிக்கல்
Advertisement
Advertisement