போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது

சேலம்: சேலம், மணியனுாரில் நேற்று முன்தினம் அன்னதானப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்குள்ள சுடுகாடு பகு-தியில், 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தனர். அவர்களை பிடித்து சோதனை செய்ததில், அவர்கள் பாக்கெட்டில், போதைக்-காக பயன்படுத்தும் 30 மாத்திரைகள் இருந்தன. விசாரணையில் அவர்கள், சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ், 21, மூணாங்கரடு விஜி, 26, என்பதும், போதை மாத்திரைகளை விற்க வைத்திருந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement