மேம்பாலத்தில் இருந்து விழுந்த 'குடி'மகன் சாவு

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டியில் உள்ள ரயில்வே மேம்பா-லத்தில் இருந்து, கடந்த, 3 இரவு ஒருவர் விழுந்துள்ளார். மக்கள் தகவல்படி, ரயில்வே போலீசார், அங்கு சென்று, அந்த வாலிபரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


விசாரணையில் கொண்டலாம்பட்டியை சேர்ந்த விக்னேஷ், 30, என்பதும், மேம்பாலத்தில் மது அருந்திய நிலையில், 'போதை'யில் அவர் தவறி விழுந்ததும் தெரிந்தது. மேலும் மருத்-துவமனையில் விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

Advertisement