பைக்கில் இருந்து தவறி விழுந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் படுகாயமடைந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் ரஞ்சித்,51; முன்னாள் அரசு வழக்கறிஞர். இவர், நேற்று முன்தினம் இரவு சூளாங்குறிச்சியில் இருந்து ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். பெருவங்கூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது, பைக்கிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ரஞ்சித்திற்கு படுகாயம் ஏற்பட்டது. உடன் அருகிலிருந்தவர்கள் ரஞ்சித்தை மீட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்து சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ரஞ்சித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement