ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் 'அபேஸ்'
விழுப்புரம்: முதியவரிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்து, 50 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த கப்பூரை சேர்ந்தவர் சிவாஜி, 60; இவர் கடந்த ஜூன் மாதம் விழுப்புரம் நேரு வீதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார்.
அங்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்தபோது இயந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை. அப்போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத 40 வயது நபர், தனக்கு நேரமாகிறது என்று கூறி ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்துள்ளார். பின், சிவாஜி ஏ.டி.எம்., கார்டை மர்ம நபர் எடுத்து சென்று வேறு ஏ.டி.எம்., மையத்தில் 50 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார்.
விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு எதிராக பிரிட்டனில் வெடித்தது போராட்டம்; பதாகைகளை ஏந்தி முழக்கம்
-
அசாமில் தொடரும் கனமழை; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக உயர்வு
-
இந்தியாவும், ஆப்ரிக்காவும் உலக முன்னேற்றத்திற்கான சக்திகள்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
-
மக்களைக் கொல்ல விரும்பவில்லை; ஒப்பந்தம் செய்யவே விரும்புகிறேன்: சொல்கிறார் டிரம்ப்
-
பஸ் நிலையத்தில் கழிவு நீர் பயணிகள் கடும் அவதி
-
எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க மத்திய அரசு ரூ.4 லட்சம் கோடி திட்டம்: முடிவு எடுக்கப்பட்டால் சிலிண்டர் ரூ.18 விலை உயரும்
Advertisement
Advertisement