பைபாஸ் சாலையில் சிதறிய ஜல்லிகளால் மக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்:கரூர்-திருச்சி நெடுஞ்சாலை, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலம் பகுதியில் இருந்து கிருஷ்ணராயபுரம் கடைவீதி அருகே வரை, புறவழிச்சாலை உள்ளது.

கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலக சாலையில் ஜல்லி ஏற்றிச்செல்லும் வாகனங்களில் இருந்தும் சிதறும் ஜல்லிக்கற்கள் சாலையில் ஆங்காங்கே பரவி கிடக்கின்றன. இந்த சாலையில், டூவீலரில் செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லியில் சறுக்கி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே, மணவாசி டோல்கேட் நிர்வாகம், புறவழி நெடுஞ்சாலை பிரிவு சந்திப்பில் சிதறியுள்ள சிறிய ரக ஜல்லிகற்கள் அகற்றிவிட்டு சாலை தூய்மை செய்து வாகன ஓட்டிகள் விபத்து இல்லமால் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement