மருந்து விற்பனை பிரதிநிதி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அருள்ஜோதி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் பிரபு, பாலசுப்ரமணி, செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், நோய் காக்கும் மருந்து பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். மருந்து பொருள் உற்பத்தி விலையிலிருந்து பன்மடங்கு அதிகபட்ச விலைக்கு விற்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். மருந்து பொருள்களுக்கு ஜி.எஸ்.டி., வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement