ஆதிதிராவிடர் நலத்துறை முகாம்: 75 மனுக்கள் மீது உடனடி தீர்வு
விருத்தாசலம்: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறப்பு முகாமில் பெறப்பட்ட 166 மனுக்களில், 75 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
விருத்தாசலம் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் முருகன் முன்னிலை வகித்தார். தனி தாசில்தார் அந்தோணிராஜ் வரவேற்றார்.
தாட்கோ மாவட்ட மேலாளர் அருள்முருகன் பயனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். முகாமில், துாய்மை பணியாளர்கள் நலவாரிய அட்டை, எஸ்.டி., (நரிக்குறவர்) ஜாதி சான்றிதழ், இலவச வீட்டுமனைப் பட்டா, தையல் இயந்திரம், புதிய ரேஷன்கார்டு, ஆதார் கார்டு உட்பட 166 மனுக்கள் பெறப்பட்டு, 75 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நெல், கரும்பு ஊக்கத்தொகை உயர்த்தி அறிவிப்பு; வரலாற்றில் இதுவே முதல்முறை என சட்டசபையில் முதல்வர் விஜய் பெருமிதம்
-
இந்திய இயற்பியலாளர் தீபக் தாருக்கு டிராக் பதக்கம் அறிவிப்பு
-
வார தொடக்க முதல்நாளில் தங்கம் விலை சற்று குறைவு; இன்றைய நிலவரம் இதோ!
-
காதலியை கொலை செய்த இந்திய மாணவன்; அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு தப்ப முயன்ற போது கைது
-
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்; முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானம் நிறைவேற்றம்
-
எப்.சி.ஆர்.ஏ., சட்ட திருத்த மசோதாவில் வெளிப்படைத்தன்மை, தெளிவான விதிகள்!
Advertisement
Advertisement