மோசடி வழக்கில் த.வெ.க., நிர்வாகி கைது

1

திருநெல்வேலி: ஆன்லைன் மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தை பிரித்துக் கொடுத்தது, ஆதார் எண்ணை தவறாக பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்தது உள்ளிட்ட புகார்களில் தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆன்லைன் மோசடியில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் பணத்தை, தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்து கொடுத்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் தமிழகம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், திருநெல்வேலியில் ஒரு பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் திருநெல்வேலி த.வெ.க., மத்திய மாவட்ட துணைச் செயலாளரும், வழக்கறிஞருமான விக்னேஷும் ஒருவர்.

இதையடுத்து விக்னேஷை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக த.வெ.க. மத்திய மாவட்ட செயலாளர் மரியஜான் தெரிவித்துள்ளார்.

Advertisement