பொது விநியோக திட்ட குறைகேட்பு முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைகேட்பு முகாம் நடந்தது.

கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த முகாமிற்கு, தனி தாசில்தார் சிலம்பரசன் தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் கவுசல்யா, இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ, தனி வருவாய் ஆய்வாளர்கள் மணிவேல், வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.

முகாமில், ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினரை சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி திருத்தம், குடும்பத் தலைவர் புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் தொடர்பாக 26 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.

வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிறைமதி, இளநிலை வருவாய் ஆய்வாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தனர். பல்வேறு கோரி க்கைகள் தொடர்பாக பெறப்பட்ட 13 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.

Advertisement