சர்ச்சையில் சிக்கிய நடிகர் விக்ரம்; அரிய வகை விலங்கினத்தை வளர்ப்பதா என எதிர்ப்பு
நமது சிறப்பு நிருபர்
லார் கிப்பன் எனப்படும் அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கு குட்டியுடன் விளையாடும் வீடியோவை வெளியிட்டு நடிகர் விக்ரம் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
நடிகர் விக்ரம் தனது செல்லப் பிராணியாக அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கு லார் கிப்பன் குட்டியை வளர்த்து வருகிறார். அவர் இந்த அரிய வகை குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இது வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலாக பரவிய நிலையில், மனிதக் குரங்கை வீட்டில் வளர்ப்பதற்கான அனுமதி சான்று விக்ரம் வைத்துள்ளாரா என வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். ஆவணங்களின் அடிப்படையில், அந்த அரியவகை குரங்கு குட்டியை முதலில் மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் வைத்திருந்தாக தெரியவந்துள்ளது.
லைகுராம் சிங், 8 லார் கிப்பன் குரங்கு குட்டிகளை வளர்ப்பதற்கான அனுமதி சான்று வைத்திருந்ததாகவும், அவற்றின் பூர்வீக நாடு மலேசியா எனவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. லைகுராம் சிங் தன்னிடம் இருந்த குரங்கு குட்டிகளில் மூன்றை, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதனுக்கு வழங்கியுள்ளார்.
அவற்றில் ஒன்றுதான் தற்போது நடிகர் விக்ரம் வீட்டில் பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. தற்போது வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கிவிட்டாலும் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. லார் கிப்பன் அரிய வகை குரங்கு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிராணியாகும். இத்தகைய விலங்குகளை வீட்டில் வளர்ப்பது மற்றும் கூண்டில் அடைப்பது தவறு என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
லார் கிப்பன் குரங்குகள் மரங்களில் வாழும் விலங்குகள்; அவை சுதந்திரமாக நடமாடுவதற்கு பெரிய மரங்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய விலங்குகளை கூண்டில் அடைத்து வைப்பது, அதன் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என இயற்கை ஆர்வலர்கள், நடிகர் விக்ரமுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதுபோன்று அரிய வகை விலங்கினங்கள் இன்னும் யார் யாரிடம் உள்ளது.
இந்த பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் யார், அரிய வகை வன விலங்குகளை கடத்தும் கும்பல் அல்லது இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் கும்பலுக்கு இதில் தொடர்புள்ளதா என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (12)
Iniyan - chennai,இந்தியா
11 ஆக்,2026 - 13:36 Report Abuse
குரங்கு இன்னொரு குரங்கை வைத்துக்கொள்ள கூடாதா?
என்னையா சட்டம்? 0
0
Reply
Anand - chennai,இந்தியா
11 ஆக்,2026 - 12:55 Report Abuse
இதில் எது அந்த அறிய வகை விலங்கினம்? 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
11 ஆக்,2026 - 12:22 Report Abuse
செய்தியை படிப்பதற்கு முன் படத்தை பார்த்து ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்கவேண்டும் என்று தினமலரும் ஆரம்பித்து விட்டதா என்ற சந்தேகம் வந்து விட்டது. 0
0
Reply
விஸ்வ நாதன் - ,
11 ஆக்,2026 - 11:02 Report Abuse
ஆயிரகணக்கான உயிர்கள் மனித உணவுக்காக கொல்லப் படுவதை விலங்கு பாதுகாப்பு ஆர்வலர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை 0
0
Reply
EagleEye - ,இந்தியா
11 ஆக்,2026 - 10:39 Report Abuse
Both are looks same.. 0
0
Reply
இளந்திரையன் வேலந்தாவளம் - ,
11 ஆக்,2026 - 10:33 Report Abuse
ஒரு சில news பார்த்திருப்போம்... சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பாம்பு, அணில் குரங்கு பிடிபட்டது கடத்தி வந்தவர் கைது ok... விலங்குகளை வாங்கியவர்கள் பற்றிய ஒரு news பார்த்ததுண்டா... சாமானியருக்கு entertainment 4 round alcohol chicken briyani, ஒரு சினிமா.அளவுகடந்த பணம் வைத்த செல்வந்தர்களுக்கு entertainment வானமே எல்லை. 0
0
Reply
ஈசன் - ,
11 ஆக்,2026 - 10:13 Report Abuse
இந்த விலங்குகள் ஆர்வலர்களுக்கு தோன்றும் பீதி பற்றி சரியாக விளங்கவில்லை. கொடிய விலங்குகளை வீட்டில் வளர்ப்பது தவறு. ஒப்புக்கொள்ளலாம். அவை மனித சமூகத்திற்கு அச்சுறுத்தல். சரி. அரிய வகை பறவைகள், குரங்குகள் போன்றவற்றை வளர்ப்பதில் என்ன தவறு. அவைகளை கூண்டில் அடைக்காமல், பெரிய மரங்கள் கொண்ட தனது தோட்டத்தில் வளர்க்க அறிவுறுத்தலாம். அரிய வகையில்லாத சாதாரண மாடுகளை பொது இடங்களில் உணவுக்காக வெட்டலாம் என்ற சர்ச்சை வந்த போது இதே விலங்கு ஆர்வலர்கள் எங்கே இருந்தார்கள். அட மனித வாழ்வாதரத்திற்காக அவைகளை வெட்டட்டும். அதை பொது இடத்தில் தான் செய்வேன் என்ற வீம்பு தான் தவறு. விக்ரம் அந்த அரிய உயிரினத்தை வளர்த்து வருகிறார் என்றால், அவருக்கு அந்த உயிரினம் வாழும் சூழல் பற்றிய அறிவுரை வழங்கலாம். உதவி செய்யலாம். அவர் கேட்க மறுத்தால், ஆர்வலர்கள் சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம். முதலிலேயே ஆட்சேபம் தெரிவிப்பது வெறும் விளம்பரத்திற்கு என்று நன்றாக தெரிகிறது. 0
0
V Narayanan - ,இந்தியா
11 ஆக்,2026 - 11:28Report Abuse
சரியான வழிகாட்டுதலை சொல்லலாம் .அவர் தோட்டம் எதிலாவது பராமரிக்க யோசனை சொல்லலாம் . 0
0
Barakat Ali - Medan,இந்தியா
11 ஆக்,2026 - 12:25Report Abuse
சரியான கருத்து ..... 0
0
Reply
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
11 ஆக்,2026 - 09:55 Report Abuse
பெரிய ஊழல் 0
0
Reply
Dum - ,இந்தியா
11 ஆக்,2026 - 09:50 Report Abuse
அவரே ஒரு அறிய வகை மிருகம் போலத்தான் இருக்கிறார் 0
0
Reply
சுந்தரம் விஸ்வநாதன் - coimbatore,இந்தியா
11 ஆக்,2026 - 09:39 Report Abuse
அவர் திரைப்பட நடிகர். மாடல் விடியலுக்கு நெருக்கமானவர். கருப்பு பணம் வைத்திருந்தாலும் பிடிக்கப்படாதவர். சட்டம் அவருக்கு கிடையாது. 0
0
Reply
மேலும்
-
வெங்காய விதை உற்பத்தியில் கவனம்! வேளாண் பல்கலை., அறிவுரை
-
இன்று இனிதாக
-
திருத்தணி முருகன் கோவிலில் 10 நாளில் ரூ.2.52 கோடி காணிக்கை
-
திருநின்றவூர் ரயில் நிலையத்தில் அத்துமீறல் காதலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
போதைப்பொருள் இல்லாத தமிழகம் துாய்மை பணியாளர்கள் உறுதிமொழி
-
லோக்சபாவில் இன்றும் அமளி; அரசும், எதிர்க்கட்சியும் உடன்பாடு செய்ய சபாநாயகர் வேண்டுகோள்
Advertisement
Advertisement