போதைப்பொருள் இல்லாத தமிழகம்; இயக்கத்தை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்
சென்னை: சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப்பொருள் இல்லாத தமிழகம் என்ற இயக்கத்தை முதல்வர் விஜய் துவக்கி வைத்தார்; தொடர்ந்து மாணவர்கள் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்
சென்னை மாநிலக் கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்- மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த முதல்வர் விஜய்க்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
அவரை பின்பற்றி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் போதைப் பொருள் விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப் பட்டது. அவர் போதைப்பொருட்கள் புழகத்தை தடுக்க சிறப்பாக பணி செய்த போலீஸ் அதிகாரிகள் 15 பேருக்கு பதக்கங்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் போலீசார் பறிமுதல் செய்த போதைப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை முதல்வர் விஜய் முன்னிலையில் துவங்கி வைக்கப்பட்டது. செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோவை, தஞ்சை ஆகிய பகுதிகளில் போதைப் பொருட்களை அழிக்கும் பணிகளை முதல்வர் விஜய் வீடியோ வாயிலாக பார்த்தார்.
@block_P@
பள்ளி, கல்லூரிகள் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றத்தை சிறப்பாக செயல்படுத்திய மாணவர்களுக்கு முதல்வர் விஜய் பரிசு வழங்கினார். போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளிகளுக்கான முதல் பரிசை கோவை செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலை பள்ளிக்கு வழங்கப்பட்டது.block_P
@block_G@
போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழாவிற்கு, போலீசாரின் மகன் ஒருவர் போலீஸ் உடையில் வந்து இருந்தான். சிறுவனை பார்த்து முதல்வர் சல்யூட் அடித்ததும், சட்டென சிறுவனும் பதிலுக்கு சல்யூட் அடித்தான். உடனே அந்த சிறுவனை விஜய் தூக்கி சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்தார்.
block_G
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னை மாநில கல்லூரியில் முதல்வர் விஜய் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
போதையை ஒன்னு முழூசா ஒழியுங்க .. பொருள் சாப்பிட்டா போதை வரும் ..ஆனா திரவம் அதான் திரவம் டாஸ்மாக் வழியா அரசு விற்பது போதை தராதா ??அல்லது கும்பலா குடித்து கெட்டுப்போவோர் தானே இன்று அதிகமாக ? அதை கண்டுக்காம விட்டு இந்த இயக்கம் கண்துடைப்பு வேலை போல தான்
மூன்று மாத ஆட்சியில் போதைப் பொருட்கள் மொத்த விநியோகத்திற்கு எதிராக ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயக்கம் நடத்துகிறார்களாம். ஓட்டுப் போட்ட கையோடு எல்லாரும் அரசு என்று ஒன்று இருப்பதையே மறந்து விடுகிறார்கள் என்று தைரியம்.
All success to this programme.But what is the reality.The most powerful country US is struggling to contain drugs .In many countries black market trade flourishes.It is very common among rich people sport persons film stars and students.
பள்ளிகள் அருகில் கோவில் பஸ்டாண்ட் ஆஸ்பத்திரி என்று மக்கள் கூடும் அணைத்து இடங்களிலும் டாஸ்மாக் ...பஸ் செல்ல முடியாத மலை கிராமங்களில் கூட டாஸ்மாக் ......இங்கு டாஸ்மாக்கில் விற்கும் அத்தனை சரக்கும் எந்த தரக்கட்டுப்பாடு இல்லாத அசுத்த மோசமான கலப்பட கேவல திராவிட சாராயம் ...இந்த திராவிட சாராயம் தயாரிக்கும் அத்தனை கம்பெனி முதலாளிகளும் திராவிட மந்திரிகள்தான் ....மக்கள் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் லாபம் ஒன்று மட்டுமே குறிக்கோள் .....10 ரூபாய் கூட மதிப்பில்லாத கலப்பட சாராயம் டாஸ்மாக்கில் ஐம்பது ரூபாய்க்கு விற்கிறான் ....அதை குடித்து அழியும் திராவிட குடிமகன்கள் ....
சட்டசபையில் விவாதத்தின் போது ஒருத்தன் நீ நடத்துவது கார்பொரேட் சாராய கம்பெனி என்று கேள்வி கேட்டான் ....இதை கேட்ட எதிர்கட்சிக்காரன் நீ நடத்துவது லாட்டரி கம்பெனி என்று பதில் ...அந்த லாட்டரி கம்பெனியிடம் 900 கோடிகள் பிச்சை எடுத்து பிழைக்கிறவன் நீ என்று அடுத்தவன் பதில் ...இதை எல்லாம் கேட்ட மற்றொருவன் அது பிச்சை இல்லை நன்கொடை என்று வழக்கமான திராவிட தத்துவம் ....இதுக்கு மாற்றம் என்று வோட்டு போட்டவனுங்க ...
எல்லாம் நாடகம் .....வெறும் விளம்பரம் ரீல்ஸ் சினிமா ......இன்றைய செய்தியில் வீடு புகுந்து தாய் மகள் வெட்டி கொலை ......இதே போல விளம்பர நாடகம் செய்து ஆரம்பிக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ன செய்யுது?? ....இதை பற்றி சட்ட சபையில் கேள்வி எழுப்ப மக்களுக்கு எந்த நாதியுமில்லை ...
போதை இல்லாத தமிழகம் என்பது ...அர்த்தம் வேறு ..
"பெண்கள் மீது போதை " ஒழிக்கப்படவேண்டும் ..
" பெண் குழந்தைகள் மீது பாலியல் போதை " ...ஒழிக்கப்படவேண்டும் ..
" அடுத்தவன் பொருள்மீது ஆசை " உதாரணத்துக்கு " சீமான் என்கிற சாமான் " திரள்நிதி திருடன் " என்பவன் மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவன் ...ஒழிக்கப்படவேண்டும் ..
" ஊழல் போதை "....ஒழிக்கப்படவேண்டும் ..
சீமான் என்கிற சாமான் தமிழ்நாட்டைவிட்டே விரட்டியடிக்கப்படவேண்டும் ...
மக்களை ஏமாற்றி ஏமாற்றி நிறைய " கோடி கோடியாய் சொத்து வாங்கி போட்டு ஊரை ஏமாற்றி வயிறு வளர்ப்பவன் ...ஒழிக்கப்படவேண்டும் ..
அதாவது, அசைவ விருந்தில் முட்டைக்கு மட்டும் தடைவிதித்து ஜீவகாருண்யம் பேசுவது போல.
ஜாஃபர் சாதிக் ஏன் தொடர்ந்து ஜாமீனிலேயே இருக்கிறார் ??
டாஸ்மாக்கால் விற்கப்படும் மது என்ன இரும்புச்சத்து டானிக்கா ??
டாஸ்மார்க் வைத்துக்கொண்டு போதை இல்லா தமிழ் நாட்டை எப்படி உருவாக்க முடியும்
என்ன செய்வது தமிழ்நாட்டின் சாபக்கேடு, கேழ்வரகில் நெய் வடிகிறது என்று ஆட்சியாளர்கள் சொன்னாலும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்கிற மிதப்பில் இருக்கிறார்கள்.