கல்வி அமைச்சகத்தில் மற்றொரு மாற்றம்; 17 நாட்களுக்குள் புதிய உயர்கல்விச் செயலாளர் நியமனம்
நமது சிறப்பு நிருபர்
கடந்த ஜூலை 23ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்வார், வெறும் 17 நாட்களில் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டார்; அவருக்குப் பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி புதிய உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, ஜூலை 23ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளராக பணிபுரிந்து வந்த வினீத் ஜோஷி மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நரேஷ் பால் கங்வார் உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின் எதிரொலியாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டது.
இதனால் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தில் அடுத்தடுத்து மாற்றம் நிகழ்ந்து வந்தது. தற்போது கடந்த ஜூலை 23ம் தேதி மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்ட நரேஷ் பால் கங்வார், வெறும் 17 நாட்களில் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டார்; அவருக்குப் பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி புதிய உயர்கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1993ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான தீப்தி கவுர் முகர்ஜி, புதிய உயர்கல்விச் செயலாளராகப் பதவியேற்றார். நரேஷ் பால் கங்வாரின் குடும்பத்தினர் அரசு திட்டத்தின்கீழ் மானியம் பெற்றது தொடர்பாக சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்தது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த தீப்தி கவுர் முகர்ஜி?
* 1993ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி தீப்தி கவுர் முகர்ஜி. இவர் இதற்கு முன்னர் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
* இவர் மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ளார்.
* மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். தேசிய சுகாதார ஆணையத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
தேன் அளித்தவன் புறங்கையை நக்குவான் என்பதை, பூரா தேனையும் இவனும் துறை அமைச்சனும் அவனுங்க குடும்பத்துக்கே அள்ளி கொடுத்துக் கொண்டு விட்டார்கள். அமைச்சர் பணத்தை திருப்பி கொடுத்து விட்டார், ஆனால் இந்த கோங்குரா பணத்தை தரவில்லை. எல்லாம் சட்டப்படி திருடியதாக சொல்றான். எல்லாம் conflict of interest. அந்த வகையில் அடுத்த ராஜினாமா கட்கரியாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. அதற்கு அடுத்த குறி அமீத்சா பெற்ற தற்குறிக்கு கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி எப்படி கொடுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்து இருக்கும்.
அனைத்தையும் விட ஆட்டம் போட்ட தர்மேந்திர பிரதானை ஆட்டி படைத்த இளைஞர்களின் திறமை தான் முக்கியமான மாற்றமே
பெங்காலிகள் என்றால் முறைகேட்டுக்குக் குறை இருக்காது .....
தோசை கல்லில் இருந்து தப்பிக்க அடுப்பில் விழுந்த கதை ஊழல் அதிகரிக்க வாய்ப்பிருக்கே தவிர குறைய வாய்ப்பில்லை என்று கல்வியாளர்கள் பலர் பேசிக்கொள்கிறார்கள்.