அபாய நிலையில் இருந்த குடிநீர் தொட்டி இடிப்பு

அன்னூர்: அபாய நிலையில் இருந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது.

காட்டம்பட்டியில், பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே, 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது. 1991ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த தொட்டி அபாய நிலையில் இருந்தது. இதை இடித்து அகற்ற, பொதுமக்கள் தொடர்ந்து கோரி வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஊராட்சி நிர்வாகத்தால், குடிநீர் மேல்நிலைத் தொட்டி இடித்து அகற்றப்பட்டது. புதிதாக விரைவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட உள்ளது என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement