சாரல் மழை

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. . கடந்த சில வாரங்களாக வெப்பம் அதிகரித்த நிலையில், நேற்று பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்தது. நெல் விதைப்பு செய்வதற்கு ஏற்ற நிலையில், விளை நிலங்களை உழவு செய்து தயார் படுத்துவதற்கு இந்த சாரல் மழை ஏற்றதாக அமைந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால் சில வாரங்களில் உழவுப் பணி தீவிரமடைந்து நெல் விதைப்பு பணி துவங்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement