தேசியக்கொடி அணிவகுப்பு

திருமங்கலம்: சுதந்திரப் போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தேசியக்கொடி அணிவகுப்பு நடந்தது.

திருமங்கலம் ராஜாஜி சிலையில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளில் சென்று மீண்டும் ராஜாஜி சிலையில் முடிவடைந்தது. ஊர்வலத்தை மாநில செயலாளர் கதலி நரசிங்க பெருமாள் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஓம்ஸ்ரீ முருகன் செய்திருந்தார். துணைத்தலைவர் தமிழ்மணி, செயலாளர்கள் மணிகண்டன், சின்னச்சாமி, சரவணன், இளைஞரணி பொறுப்பாளர் பிரகாஷ் பங்கேற்றனர்.

Advertisement