இன்று சுதந்திர தின கொண்டாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில், இன்று 15ம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது.

விழாவையொட்டி, காலை 9:05 மணியளவில், கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.

இதையடுத்து, சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினரை கவுரவிப்பதுடன், அரசின் நலத்திட்ட உதவிகளை, கலெக்டர் வழங்குகிறார்.

மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் விழாவிற்கான ஏற்பாடுகளை டி.ஆர்.ஓ., அரிதாஸ் மற்றும் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Advertisement