வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில் மாணவியர் பேரவை பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், மாணவியர் பேரவை நியமன விழா சமீபத்தில் நடந்தது.

செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கல்லுாரியில், மாணவியர் பேரவை நியமன விழா மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில், சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில், மாணவியர் பேரவை தலைவியாக சூர்யா தீத்தா, துணைத் தலைவராக ஹரிஸ்ரீ, செயலராக சமிஹாதாஜ், துணை செயலராக லோக ஜனனி, பொருளாளராக ராகவி, துணை பொருளாளராக சாருமதி உள்ளிட்டோர் பொறுப்பேற்று கொண்டனர்.

அதன்பின், தொழில் முனைவோர், தொண்டு நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான பிரபோத் ஜெயின் பங்கேற்று, வித்யாசாகர் கல்வி குழுமத்தின் சார்பில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பல்கலை தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த 200 மாணவியருக்கு, 10 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

இதில், கல்லுாரி முதல்வர் அருணா தேவி, பேராசிரியர்கள் மற்றும் மாணவியர் பங்கேற்றனர்.

Advertisement