கூட்டு குடும்பத்தின் பயன்பாட்டில் உள்ள சொத்தை வாங்கும் போது கவனிக்க…
புதிதாக சொத்து வாங்கும் போது அதை யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பதில் மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்கிறோம். சமீபகாலமாக சொத்து விற்பனையில் தரகர்கள் ஆதிக்கம் அதிகரித் துள்ள நிலையில், மக்கள் அதிகபட்ச விழிப்புடன் இருக்க வேண்டும்.
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சொத்து விற்பனை நடவடிக்கைகளில் தரகர்கள் இன்றி எதுவும் செய்ய முடியாது என்ற அளவுக்கு நிலைமை சென்று விட்டது. இதில் சொத்தின் உரிமையாளர் யார், அவர் தற்போது இருக்கிறாரா என்பது போன்ற விஷயங்களை பார்க்க வேண்டியது அவசியம்.
சில இடங்களில் சொத்து உரிமையாளரிடம் பொது அதிகாரம் பெற்றதாக தரகர்கள் விலை பேசுவதை பார்க்க முடிகிறது. இதுபோன்ற சொத்துகளை நீங்கள் ஒரு முறை பார்த்துவிட்டு வந்தவுடன், தரகர்கள் பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுப்பது வழக்கமாக உள்ளது.
சொத்து விற்பனைக்கு வரும் போது அதில் கடைசி நிலையில் இருக்கும் பொது அதிகார முகவரை கடந்து, அதன் உண்மையான உரிமையாளர் யார், அவர் தனி நபரா, கூட்டு குடும்ப உறுப்பினர்களா என்று பார்க்க வேண்டும். இதில் கூட்டு குடும்ப பயன்பாட்டில் உள்ள சொத்துகளை வாங்கும் போது மக்கள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பெரும்பாலான குடும்பங்களில் பொதுவான சொத்து இருக்கும். அதை அனைவருக்கும் பங்கிட முடியாது என்பதால், யாராவது ஒருவருக்கு, ஒருமித்த கருத்து அடிப்படையில் கொடுப்பது வழக்கமாக உள்ளது. உதாரணமாக, ஒரு பெரிய வீடு உள்ளது, அதில் கூட்டு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வசித்து வருகின்றனர்.
அவர்கள் அந்த சொத்தை விற்க வேண்டும் என்று நினைத்தால், அனைவரும் பத்திரப்பதிவுக்கு வந்து விற்பனையை முடிப்பது சாத்தியமில்லை. எனவே, இத்தகைய சொத்து வாங்கும் போது, யாராவது ஒருவர் பெயருக்கு மற்றவர்கள் விடுதலை பத்திரம் கொடுத்தால் போதும்.
அவர் சட்டப்பூர்வமாக நேரில் ஆஜராகி சொத்து விற்பனை முடிக்க வாய்ப்பு ஏற்படும். இது போன்ற நிகழ்வுகளில், சொத்து வாங்குவோர், உரிமையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டியது சட்ட ரீதியாக அவசியமாகிறது.
ஏனெனில், சொத்தின் வாரிசுகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவினால், விற்பனை நடவடிக்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சில இடங்களில் வாரிசுகளில் யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து இருப் பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கூட்டு குடும்ப பயன்பாட்டில் உள்ள சொத்தை வாங்கும் போது, அனைவரும் ஒரே பகுதியில் வசிக்கின்றனரா அல்லது யாராவது சிலர் வெளி நாடுகளில் இருக்கின்றனரா என்று பார்க்க வேண்டும். குறிப்பாக, அந்த சொத்து அவர்களுக்கு எப்போது, என்ன வழியில் கிடைத்தது என்று பார்க்க வேண்டும் என்கின்றனர் பதிவுத்துறை அதிகாரிகள்.
சொத்தின் வாரிசுகளுக்குள் கருத்து வேறுபாடு நிலவினால், யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தால், விற்பனை நடவடிக்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும்
-
2047ல் வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா மாறும்; டில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு
-
சுதந்திர தின விழா கோலாகலம்; டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி
-
இந்திய மக்களுக்கு அமெரிக்கா சுதந்திர தின வாழ்த்துக்கள்
-
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு
-
அனைத்து கோவில் நிலங்களையும் ஏலத்தில் விடக்கோரி கிராம மக்கள் மனு வழங்கல்
-
போக்குவரத்து நெரிசலை தீர்க்க கரூரில் ஒத்திகை