காரில் வலம் வரும் திருடர்கள்: மானாமதுரை மக்கள் அச்சம்
மானாமதுரை:மானாமதுரையில் காரில் வந்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் அதிகரித்துள்ளது. மானாமதுரை அண்ணாமலை நகர் பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு
பூட்டியிருந்த 2 வீடுகளை மர்ம கும்பல் காரில் வந்து நோட்டமிட்டு இரவில் வீடுகளின் பூட்டுகளை உடைத்துநகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. போலீசார் விசாரணை மேற்கொண்ட போதிலும், இதுவரை திருடர்களை கண்டுபிடிக்க
முடியாத நிலை நீடிக்கிறது.
அண்ணாமலை நகர் பகுதியில் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே காரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்த கும்பல் மானாமதுரை பகுதியில்
ஒரே இரவில் பூட்டியிருந்த 4 வீடுகளை குறிவைத்து நடந்த திருட்டில் 27 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 ஆயிரம் வரை கொள்ளையடித்து தப்பியுள்ளனர்.
போலீசார் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
வாஜ்பாய் நினைவு தினம்; டில்லியில் ஜனாதிபதி, சிபிஆர், பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை
-
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ராணுவத்தினருக்கு உறுதுணை; மோப்ப நாய் டைசனுக்கு சிறப்பு விருது
-
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த இந்திய தேசியக்கொடி; அமெரிக்காவில் சுதந்திர தின விழா கோலாகலம்
-
6,000 டன் ரேஷன் அரிசி ஊழல்; அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்
-
11 மது வகைகள் மீதான தடை ஒரே நாளில் நீக்கம்!
-
நெரூரில் ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவில் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு