இஸ்ரேலுடனான தனது நட்பை இந்தியா மதிக்கிறது; பிரதமர் மோடி
புதுடில்லி: இந்தியாவின் 80வது சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அதிபர் ஐசக் ஹெர்சாக் உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. இந்தியா, இஸ்ரேலுடனான தனது நட்பை மதிக்கிறது. நமது மக்களின் நலனுக்காக இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அதேபோல் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்த, கயானா நாட்டு அதிபர் டாக்டர் இர்பான் அலி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (2)
RK - ,
16 ஆக்,2026 - 12:50 Report Abuse
தீவிரவாதத்தின் உண்மையான வலி என்ன என்பது அறிந்த இரு நாடுகள். தீவிரவாதம் இல்லாத உலகம் படைக்கும். வாழ்த்துக்கள் இஸ்ரேல் தலைவர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் மக்களுக்கும் வாழ்க வையகம் வாழ்க பாரதம். 0
0
Reply
SUBBU,MADURAI - ,
16 ஆக்,2026 - 12:29 Report Abuse
இஸ்ரேலின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி! இந்தியா எப்போதுமே பன்மைத்துவம் வாய்ந்ததாகவும், அனைத்து கலாச்சாரங்களையும் நாகரிக உறவுகளையும் வரவேற்கும் நாடாகவும் இருந்து வந்துள்ளது. இஸ்ரேல், இந்தியாவின் சிந்தனைப் போக்கும் இதே போன்றது, மேலும் பல்லாயிரம் ஆண்டுகளாக இதே போன்ற தாக்குதல்களை இந்த
இரண்டு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன. வரவிருக்கும் நூற்றாண்டு, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் இஸ்ரேல் கூட்டணியின் நூற்றாண்டாகும். இந்த நல்லுறவு வரும் ஆண்டுகளில் மேலும் வலுப்பெறட்டும். 0
0
Reply
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி
Advertisement
Advertisement