இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் மற்றும் இந்தியாவின் தேர்தல் முறையை குறிப்பிட்டு, அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் எங்கள் நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார்; செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும்?
இந்தியாவில் நடந்த கடந்த தேர்தலில் 64 கோடியே 60 லட்சம் வாக்காளர்கள் பங்கேற்றனர். அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் ஓட்டளித்தனர். அதேவேளையில், ஒவ்வொரு வாக்காளரும் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள ஆவணத்தைக் கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும்; இதனால் நாம் Save America Act இப்போதே நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
என்ன சட்டம்?
* அமெரிக்க தேர்தல்களில் ஓட்டளிக்க பதிவுசெய்யும் நபர்கள், செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன், அமெரிக்கக் குடியுரிமைக்கான ஆதாரத்தையும் வழங்க வேண்டும்.
* இந்தச் சட்டம், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் ஆகியவற்றுக்கு விதிவிலக்குகளுடன், தபால் மூலமான ஓட்டளிப்பதை கட்டுப்படுத்தவும் முயல்கிறது. குடிமக்கள் அல்லாதவர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குமாறு இது கட்டாயப்படுத்தும்.
* கூட்டாட்சித் தேர்தல்களில் அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று வாதிட்டு, வெள்ளை மாளிகை இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ளது. தேர்தல் மோசடியை தடுக்க இந்தச் சட்டம் தேவை என டிரம்ப் பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரியண்ணன் இந்தியாவை காப்பி அடிக்கிறாறு ஹி ஹி
உங்களுடைய ஏமாற்றுதனம் வேண்டாம், உங்களுடைய பொங்கச் சோறும் வேண்டாம்.
குடிமக்கள் மட்டும் வாக்களிக்க பிறப்பு, பள்ளி சான்று, புகைப்பட அடையாளம் மூலம் கள்ள ஓட்டு தவிர்க்கும் இந்திய தேர்தல் முறை உலகில் சிறந்தது. ஓட்டு மெசின் விரைவில் ஓட்டு போட வகை செய்கிறது. அமெரிக்கா பின் பற்ற வேண்டும்.மேலும்
-
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு; மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு
-
தொடர்ச்சியாக 30 மணி நேரம் வானில் பறக்கும் தாக்குதல் ட்ரோன்கள்; குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது