திரிணமுல் காங்., அலுவலகத்தில் முன்னாள் துணை சபாநாயகர் சடலமாக மீட்பு
கோல்கட்டா: மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் அஷீஸ் பானர்ஜி திரிணமுல் காங்., அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி முதல்வராக இருந்த போது துணை சபாநாயகராக பணியாற்றியவர் அஷீஸ் பானர்ஜி. இவர் 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட இவர் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 16) பீர்பூம் மாவட்டத்தில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அலுவலகத்தில் இறந்த நிலையில் அஷீஸ் பானர்ஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தனரா என்று பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். அவர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை போலீசார் கண்டெடுத்து உள்ளனர்.
ஒரு பக்கம் கொண்ட கடிதத்தில், ''எந்தவொரு வேலைக்காகவும் பணம் பெற்றதில்லை; கட்சிக்குள் நடக்கும் தவறுகளை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; அவற்றை எதிர்த்துப் போராட இயலவில்லை'' என்று அஷீஸ் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
மம்தா பானர்ஜிக்கு நெருக்கமான மாஜி அமைச்சர் மர்ம மரணம்; பின்னணி குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (8)
ஆகுயர்தான் - ,
16 ஆக்,2026 - 14:43 Report Abuse
இதே வரிசையில் அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாட்சாவின் மரணம் போன்றவற்றையும் சேர்த்து விசாரிக்க வேண்டும். திரு வைகோ அவர்கள் தான் எங்கு வேண்டுமானாலும் வந்து சாட்சியம் அளிக்க தயார் என்று சூளுரை விடுத்தார் 0
0
Vasan - ,இந்தியா
16 ஆக்,2026 - 15:37Report Abuse
ஸ்டாலின் அவர்கள் வெள்ளை அளிக்க வேண்டும். 0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
16 ஆக்,2026 - 15:51Report Abuse
நீ எப்பவும் போல உடன் பிறப்பாவே இரு ,கட்சி மாற உங்க இமாம் சொன்னாரா ? 0
0
Reply
B N VISWANATHAN - chennai,இந்தியா
16 ஆக்,2026 - 14:10 Report Abuse
எவ்வளவு ஒரு நேர்மையான MLA.
தலைமைக்கு எதிராக ஒண்ணும் செய்ய இயலவில்லை ன்னு தைரியமாக ஒத்து க்கும் மனிதர்.
கழக MLA க்கள் மாதிரி கட்சி மாறி
போகாமல் கவரி மான் போல் உயிரையே விட்டடுட்டார் . 0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
16 ஆக்,2026 - 13:21 Report Abuse
பாஜக த்ருணாமூல் மாஜி அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிச்சுக்கிட்டே போனா ரொம்பவே விக்கெட்ஸ் விழும்போல கீதே >> 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 ஆக்,2026 - 13:02 Report Abuse
மர்ம மாயம் மற்றும் கொடநாடு வழக்கு மாதிரி இதுலயும் உண்மை வெளிவராது .... 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
16 ஆக்,2026 - 12:56 Report Abuse
சிலர் செய்த லஞ்சம், அரக்க ஆட்சி அராஜகத்திற்கு அப்பாவிகள் பலி ஆகின்றனர் போல. 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 ஆக்,2026 - 12:24 Report Abuse
2011-2026 காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்துள்ளது த்ருணாமூல் .... இஸ்லாத்துக்கு ஆதரவான அரசாகக்காட்டிக்கொண்டே அடாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர் .... உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் .... 0
0
Reply
மேலும்
-
பாஜவுக்கு புது நிர்வாகிகள் நியமனம்: ஸ்மிருதி இரானி, வசுந்தரா ராஜேவுக்கு முக்கிய பதவி
-
ஊரக வளர்ச்சி துறை மாவட்ட பேரவை கூட்டம்
-
மழை குறைந்தும் அருவியில் நீர்வரத்து
-
‘சிறந்த ரஷ்ய இலக்கியங்கள் தமிழுக்கு வர வேண்டும்’
-
5 நாளுக்கு ஒருமுறை குடிநீர் 'சப்ளை': திருத்தணி நகராட்சியில் மக்கள் சிரமம்
-
சாலை பள்ளத்தால் விபத்து ‘ஏசி’ மெக்கானிக் உயிரிழப்பு
Advertisement
Advertisement