அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

படப்பை: சாலமங்கலம் பகுதியில், அழுகிய நிலையில் கிடந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

படப்பை அடுத்த சாலமங்கலத்தில். தமிழக அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பில் புது அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இங்கு ஆட்கள் குடியேறாத பகுதியில், 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. தகவலறிந்து வந்த படப்பை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement