டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ரத்தேஷ் ராஜூவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
சென்னை: டாஸ்மாக் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில், மது கொள்முதல், விற்பனை, சரக்கு போக்குவரத்தில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து, சில தினங்களுக்கு முன், 45 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது, டாஸ்மாக் நிறுவனத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருப்பதற்கான ஆதாரங்களை கைப்பற்றினர்.
அவற்றை ஆய்வு செய்தபோது, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் இருந்த ரத்தீஷ் ராஜூ என்பவரும் ஊழலுக்கு சூத்திரதாரிகளாக செயல்பட்டது தெரியவந்தது. இவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விசாகனும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த ஊழல் வழக்கில், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 பேர் சிக்கி உள்ளனர். இவர்களில் ரத்தீஷ் ராஜூ தலைமறைவாக உள்ளார்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 17) ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜூவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். தலைமறைவாக ரத்தேஷ் ராஜூவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லாமல் இருக்கவும், இந்தியா வந்தால் கைது செய்யவும், 'லுக் அவுட் நோட்டீஸ்' வழங்கி உள்ளனர்.
இவர்களையெல்லாம் யாராலும் நெருங்கவே முடியாது...இருக்கவே இருக்கு கோர்ட்...முன்ஜாமின்..பின்ஜாமின் எல்லாம் சுலபமா வாங்கிடலாம்.அப்பிடியே ஹைகோர்ட் ஏதாவது செய்தால் சுப்ரீம் கோர்ட் தட போட்டு விடும்.போயி வேர வேல இருந்தா பாருங்க...
ஏன்பா எத்தனை மாதங்கள் வருடங்கள் ஆகி விட்டன செந்தில் பாலாஜி கைது, அவர் தம்பி அசோக் குமார் தேடல் இவரை , தமிழ் நாட்டில் இருந்த போதும் இரண்டு வருடங்களுக்கும் மேல் இன்றைய தேதி வரைக்கும் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இதில் அதிகாரிக்கு லுக் அவுட் நோட்டீஸ் வேற . விரைவாக விசாரித்து தண்டனை வழங்கினால் ஒழிய, மத்திய அரசு மேல் மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் தான் போகும்.
அவ்வளவு பெரிய உடம்புடன் இருந்த பூசி ஆனந்தயே கண்டுபிடிக்கமுடியாமால் திணறியது நம் காவல்துறை துறை என்பது வரலாறு. ஆட்சி மாறினாலும் காச்சிகள் ஒன்றுதான்.
எதுவும் பண்ண முடியாது . நமது உச்ச நீதி மன்றம் இருக்கவே இருக்கு ..கபில் சிபில் மண் சங்க்குவி வில்சன் ..கவனிச்சிப்பாங்க ..இன்று நடக்கிற எல்லா அக்கரமத்திற்கும் இந்த நீதி மன்றம்தான் ... கோர்ட் . அரசாங்கத்தின் கைகளை கட்டிப்போட்டருக்கு ...விஜய் மல்லய்யா எல்லாம் எப்படி தப்பிச்சாங்க ..போலீஸ் தேடும் போது தலை மறைத்தால் ..தண்டனை கிடையாது. நியயாமற்ற முறையில் இன்று நடப்பது நமது நீதிமன்றங்களே
சில நீதிபதிகள் அவர் குற்றம் புரிந்துள்ளார் என்று தெரிந்தும் அவரை விடுவித்து உள்ளனர். இதே லஞ்ச ஒழிப்பு துறை தலைவர் மட்டுமே மாற்றம் செய்ய பட்டுள்ளார். மற்றவர்கள் எல்லோரும் புதியவர்கள் போல விசாரணை நடத்துகின்றனர்.மேலும்
-
பூட்டிய கழிப்பறை முன் வைத்த மீன் பெட்டியால் பாதிப்பு
-
காலே டெஸ்ட்டில் இந்தியா 462 ரன் குவிப்பு; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இலங்கை
-
சொல்கிறார்கள் ––––––––––– ‘வாடிக்கையாளர்கள் பாராட்டுவதே பெரிய அங்கீகாரம்!’ –––––––––––
-
நெட் தேர்வில் 3 பாடங்களுக்கு மறுதேர்வு; மாணவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் என ராகுல் குற்றச்சாட்டு
-
விவசாயிகள் மானியம் பெற அடையாள எண்ணில் நில விபரம் பதிய வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
-
கோவை மாணவர் கொலையில் உண்மையை திசை திருப்ப வேண்டாம்; உதயநிதிக்கு நிர்மல் குமார் பதில்