பால்குடம் ஊர்வலம்

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுதத பெரியசெவலை துர்க்கை காளியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து 5:00 மணியளவில் கோவிலிலிருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று துர்க்கை காளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement