டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி

சின்னமனூர்:கடமலைக்குண்டு தாண்டத்தேவர் மகன் மகேந்திரன் 25. சின்னமனூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்தார். தனது டூவீலரில் சின்னமனூர் பைபாஸ் ரோட்டில் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி சென்ற போது, பின்னால் வந்த கார், டூவீலர் மீது மோதியது.

மகேந்திரன் பலத்த காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. அவரை மீட்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மகேந்திரன் இறந்தார்.சின்னமனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement