மொபட் மீது டிராக்டர் மோதி காய்கறி கடைக்காரர் பலி

விழுப்புரம்: மொபட் மீது டிராக்டர் டிப்பர் மோதிய விபத்தில் காய்கறி கடை உரிமையாளர் இறந்தார்.

விழுப்புரம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன், 77; காய்கறி கடை உரிமையாளர். இவர், நேற்று முன்தினம் தனது மொபட்டில் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கமாக சென்றார்.

விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு எம்.ஆர்.ஐ.சி., பள்ளி அருகே சென்றபோது, மொபட் மீது அவ்வழியே வந்த டிராக்டர் டிப்பர் மோதியது. இதில் படுகாயமடைந்த பாண்டியன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement