எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவியின் கண்ணியத்தைக் காக்க வேண்டும்; ராகுலுக்கு அறிவுறுத்தல்
புதுடில்லி: பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடரில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தனது பதவிக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளத் தவறிவிட்டார் என மத்திய பார்லி விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டினார் .
இது குறித்து ஆங்கில செய்தி சேனலுக்கு கிரண் ரிஜிஜூ அளித்த பேட்டி: நீங்கள் ஆரம்பத்திலிருந்தே பார்லிமென்ட் செயல்பாடுகளைக் கவனித்து, ராகுல் அவைக்குள் எப்படி நடந்துகொள்கிறார் என்பதையும் பார்த்திருக்கிறீர்கள். அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போலத் தோன்றுகிறாரா?
எனக்கு ராகுலுடன் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை; நாங்கள் உரையாடுகிறோம், சந்திக்கிறோம். இருப்பினும், ஒரு எதிர்க்கட்சித் தலைவர் தனது பதவிக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளத் தவறிவிட்டார்.
அவர் தனது பதவியின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் நிலைநிறுத்தும் வகையில் செயல்பட வேண்டும்; அதற்கேற்ப அவையில் பேச வேண்டும். ராகுல் ஒரு குறிப்பிட்ட பாணியைக் கடைப்பிடித்ததால், அவருடைய எம்பிக்களும் அதே பாணியில் நடந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நாம் இழுத்து வந்து உட்கார வைக்கக்கூடிய குழந்தைகளைக் கையாளவில்லை; நம்மால் அதிகபட்சமாகச் செய்ய முடிவது அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பதோ அல்லது கெஞ்சுவதோதான்.
பார்லிமென்டிற்கு வந்து விவாதிக்குமாறு காங்கிரஸ் கட்சியிடம் நாங்கள் பலமுறை கேட்டுக்கொண்டோம்; ஆனால் அவர்கள் அதற்குச் சற்றும் விரும்பவில்லை. ரகளை செய்வது, கூச்சலிடுவது, தகாத வார்த்தைகளை பேசுவதை மட்டுமே காங்கிரஸ் எம்.பி.க்கள் விரும்புவதாக தெரிகிறது. ஒரு பார்லிமென்ட் எம்பி ரகளை செய்ய மட்டுமே விரும்பினால், அவர் எம்.பி.யாக இருப்பதில் என்ன பயன்? அவர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தலாமே?
காங்கிரஸ் கட்சி பார்லிமென்டில் விவாதத்திலிருந்து தப்பி ஓடுவதற்கு சாக்குப்போக்கைக் கூறினார்கள். அரசு ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்கவும், விளக்கவுமாகத் தயாராக இருந்தபோது, காங்கிரஸ் கட்சி யதார்த்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் இல்லாத காரணத்தினாலேயே தப்பி ஓடத் தொடங்கியது.
ராகுல் பிரதமரை நாடகத்தனமாகக் கேலி செய்ய முயன்றார், ஆனால் இறுதியில் அவர் தன்னையே ஒரு கேலிக்கூத்தாக்கிக் கொண்டார். அவர் தனது சொந்த நற்பெயருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளார்; அதிலிருந்து மீள்வது கடினமாக இருக்கும். இவ்வாறு கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.
விநாசாகாலே விபரீத புத்தி
முதலில் உறுப்பினர்கள் கையில் ஜாடை காட்டுவது, கண்ணடிப்பது, கட்டி பிடிப்பது போன்ற சில்மிஷம் சேட்டைகளை நிறுத்தவேண்டும். இதுபோல் செய்வதற்கு தமிழக திருச்சபையில் சபாநாயகர் அனுமதி அளிக்கிறார்.
ஒன்றில் பெயரை மாற்றுங்கள். அல்லது செய்திக்கு ஏற்றவாறு முறையான கருத்துக்களை பதிவிடுங்கள். இந்த தலைப்புக்கு ஏன் சபாநாயகரை இழுக்கவேண்டும். மனதின் அழுக்கு வீதிக்கு வரவேண்டாம்.
மனதின் அழுக்கு வீதிக்கு வரவேண்டாம் .... கெட்டுப்போன வடை தனது பழைய கருத்துக்களை பார்வையிடுவதில்லையா ??
ஐயா ஏன் இப்படி குழம்பி திவிக்கிறீர்கள். விஜய் என் அனுமதிபெற்றுத்தான் கை ஜாடை காட்டினார் என்று சொனாரில்லையா. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். என்கருத்தை இன்னொரு முறை படியுங்கள் புரியும்.
உனக்கும் எதுவும் புரியாது
..என்ன செய்ய
விரைவில் குணமாக ஜெபிக்கிறேன்
பாராளுமன்றத்தில் நேற்று இரவு அவர் இருந்த மனா நிலை மறக்க வில்லை. அவருக்கு பிடித்த குழுவினருடன் பேசுவது போல் எண்ணத்தால் செய்கையில் காட்டுகிறார்.
கேட்டா தெரியும் சேதி.
எதிர்கட்சி தலைவருக்கு/ ஏன் எம்பி க்கே லயக்கில்லாத ஆள்!
one cannot expect decency from today's Congress or RG. Any advice to them is a waste. 12 years of Frustration has shown their true colours.
ராகுல் காந்தியிடம் கண்ணியத்தை எதிர் பார்ப்பது என்பது நாய் வாலை நிமிர்த்த முயற்சிப்பது போன்ற கதைதான். இவருக்கு வாக்களிக்கு மக்கள் அடுத்த தேர்தலில் சற்று சிந்தித்து இவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
The BJP frequently disrupted and blocked parliamentary proceedings during the Manmohan Singh-led UPA government.
use your mind properly and then comment
did bjp acted like rahul with such filthy actions...
அவர் வா அதுக்கு சரிப்பட்டுந வரமாட்டார் .. வராத ஒண்ண வா வா வான என்ன செய்ய முடியும் ??
டெல்லியிலும் , தமிழகத்திலும் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றால் ஆபாசமாக, விரசமாக பேசி கூச்சலிடுவதுதான் தகுதி என ஒரு உருவ கட்டமைப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தவேண்டும் என்ற ஒரு முனைப்புடன் செயல்பால்டுவது தெரிகிறது. அது போக பதவி இல்லையென்றால் சாக்கடையில் ஓடும் பெருச்சாளி போல நடந்து கொஎள்வார்கள் என்பது தெரிகிறது. முக்கியமாக இப்படி ஊளையிடுபவர்கள் வாரிசு அரசியலில் வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.