இந்தியாவில் 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவழக்குகள்; முழு பட்டியல் இதோ!
-நமது சிறப்பு நிருபர்-
நாட்டின் உள்ள 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எம்பி, எம்எல்ஏக்கள், மாநில முதல்வர்கள் மீதான குற்றவியல் வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல மனுத்தாக்கல் செய்து உள்ளார். அவர் ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். நாட்டின் உள்ள 28 மாநில முதல்வர்களில் 14 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதிக வழக்கு நிலுவையில் உள்ள மாநில முதல்வர்கள் விபரம் பின்வருமாறு:
1.தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி- 89 வழக்குகள்
2. மேற்குவங்க முதல்வர் சுவேந்து அதிகாரி- 29 வழக்குகள்
3. கர்நாடகா முதல்வர் டி.கே.சிவக்குமார்- 19 வழக்குகள்
4. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு- 19 வழக்குகள்
5.கேரள முதல்வர் சதீஷன்- 18 வழக்குகள்
6. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்- 5 வழக்குகள்
7. மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்- 4 வழக்குகள்
8. ஹிமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங்- 4 வழக்குகள்
9. தமிழக முதல்வர் விஜய்- 2 வழக்குகள்
10. பீஹார் முதல்வர் சாம்ராட் சவுத்ரி- 2 வழக்குகள்
அதேபோல் சிக்கிம் முதல்வர் தமாங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜி, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா ஆகியோர் மீது தலா ஒரு குற்ற வழக்கு நிலுவையில் இருக்கிறது.
பார்லிமென்ட்
மொத்தம் உள்ள லோக்சபா எம்பிக்கள் 543 பேரில் 251 பேர் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 170 பேர் (31 சதவீதம்) மீது 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான கடும் குற்றவழக்குகள் இருக்கின்றன.
அதேபோல் ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள எம்.பி.க்கள் 233 பேரில், 75 பேர் (33 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அவற்றில் 40 வழக்குகள், 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக் கூடிய கடும் குற்ற வழக்குகள் ஆகும்.
மாநில வாரியாக குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள எம்எல்ஏக்களின் சதவீதம் பின்வருமாறு:
* மேற்குவங்கம்- 58 சதவீதம்
* கேரளா- 57 சதவீதம்
* ஆந்திரா- 56 சதவீதம்
* தெலுங்கானா- 49 சதவீதம்
* ஜார்க்கண்ட்-45 சதவீதம்
* ஒடிசா- 45 சதவீதம்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சண்டை சச்சரவு கோர்ட்டு வழக்கு இவை யாவும் அரசியல் வாதிகளுக்கு கை வந்த கலை! பொறுத்து இருந்து வேடிக்கை பார்ப்பதே மக்கள் வேலை! இடையில் நீரென்ன செய்ய முடியும்?
Please also make know to the public both past and present elected representatives criminal history. And let there be a stand to criminal records of conants in Elections be it Panchayat, Municipal, Legislative Assembly or Lok Sabha. May the public know their proposed representatives competency and background.
They are public servants.They should come under the purview of appropriate laws of the land.
They never think so, once elected, they assume their Masters/Dadas. In one of the recent clipping, one follower of a DMK MP standing before a closed gate is announcing " Honble MP has come, the door.
மக்கள் எதை வெச்சு ஓட்டுப் போடுறாங்க ??
Speaks volumes for the fantastic work by the prosecutors who failed to get a severe punishment for these fellows.
இதுலயும் நம்பர் 1
shameful
people with serious offences should not be allowed to contest.More the cases more the popularity in india.Our judiciary is so week that nothing serious will happen.
தமிழ்நாடு எம்எல்ஏக்கள் மீதும் முதல்வர் மீதும் குற்ற வழக்குகள் இல்லாத இருப்பதும் முதல் ஐந்து மாநிலங்களில் தமிழகம் இல்லாத இருப்பதும் உண்மையில் நல்ல விஷயம்
2 முதல் 5 ஆண்டுகள் தண்டனை பெறும் வகையில் உள்ளவர்களுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு தரக்கூடாது!
இவர்கள் எல்லா வழக்குகளில் இருந்தும் வெளியே வந்து விட்டார்கள். ஒரு குற்றச்சாட்டு கூட நிருபிக்கப்பட வில்லை.
We will turn to first rank very soon Tamil Nadu moving forwardமேலும்
-
சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு; ஒரே மாதத்தில் 25 பேர் மீது நடவடிக்கை என பட்டியலிட்ட அண்ணாமலை
-
பாரத்நெட் பங்கீட்டாளர்கள் தேர்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்
-
கிரசன்ட் மழலையர் பள்ளியில் நடந்த மாறுவேட போட்டி
-
மாவட்ட பெண்கள் கபடி போட்டி உடுமலை அணி மூன்றாம் இடம்
-
கேரளாவில் தொடர் திருட்டு: இரு பெண்கள் கைது
-
மத்திய அமைச்சர் நட்டாவுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை!