விசிக மறியலில் வழி கேட்ட வாலிபர் எஸ்.ஐ.,க்கு 'பளார்' விட்டதால் பரபரப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூரில், வி.சி.க.,வினர் மறியலில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனத்தில் வந்து வழிகேட்ட வாலிபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எஸ்.ஐ., கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர், ரயில்வே ஸ்டேஷன் முன், வி.சி.க., சார்பில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்த நாள் மற்றும் நேற்று நடந்த அக்கட்சி மாநாடு தொடர்பான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இந்த பேனரை, மாநகராட்சி அலுவலர்கள் நேற்று அகற்றினர்.
மாநகராட்சி கமிஷனர் ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும், திருமாவளவன் பேனரை மட்டுமே அகற்ற கூறியுள்ளதாகவும் கூறி, மாநகராட்சி அலுவலகம் எதிரே அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
மறியல் நடந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஏராளமான பொதுமக்கள், வழி கேட்டு வி.சி.க.,வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதேபோல, வாலிபர் ஒருவர் வழி கேட்டு, வி.சி.க.,வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, சமாதானப்படுத்த வந்த போலீசாரிடம், அந்த வாலி பர், 'நான் வேலைக்கு செல்ல வேண்டும். என் சம்பளத்தை யார் தரு வாங்க' எனக்கேட்டு, வாக்குவாதம் செய்தார். போலீசார் அந்த வாலிபரை, பொறுமையாக இருக்குமாறு கூறியும், அவர் வாக்குவாதம் செய்ததால், ஒரு கட்டத்தில், போலீசா ருக்கும், வாலிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, வாலிபரை, எஸ்.ஐ, அப்துல் ரஹீம், 55, கன்னத்தில் அறைய, பதிலுக்கு அப்துல் ரஹீமை கன்னத்தில், வாலிபர் ஓங்கி அறைந்தார்.
இதில், நிலைகுலைந்த அப்துல் ரஹீம் மற்றும் போலீசார், அந்த வா லிபரை போலீஸ் ஸ்டேஷனுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், தஞ்சாவூர், விளார் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ், 26, என, தெரிந்தது. ஆகாஷை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, அகற்றப்பட்ட விதிமீறல் பேனர் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்ட பின்னரே, வி.சி.க.,வினர் கலைந்து சென்றனர்.
போலீசாரை ஆகாஷ் தாக்கியபோது, அவருக்கு பின்னால் பைக்கில் நின்றிருந்த திருக்கானுார்பட்டியை சேர்ந்த அய்யப் பன், 27, என்பவர், போலீசாரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
அடங்கமறு அத்துமீறு என்ற திருமாவின் போதனையை அவரது ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள் திருப்பி அடி என்ற திருமாவின் போதனையை அந்த ஸ்கூட்டர் காரர் பின்பற்றியிருக்கிறார்
காவல் துறைக்கு கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடக்க பயிற்சி அளிக்க வேண்டும் … அடிப்படை நாகரீகம் கூட தெரியவில்லை .. ஏதோ ஆண்டவர்கள் போல் நடந்து கொள்வது ..மேலும் நிதி அரசர்கள் கண்களை கட்டிக்கொண்டு இருக்கிறார்களோ ?
எப்போதுமே மீசையும் கையுமாக இருக்கும் ஒரு அரசியல்வாதியின் கட்சி அவரைப்போலத்தான் இருக்கும்
அடிதடி மிரட்டு பாலியல் பலாத்காரம் மிரட்டல் உருட்டல் வாய்க்கு வந்தபடி பேசுதல் எல்லோருக்கும் அறிவுரை கூறுதல் இதெல்லாம் சகஜமப்பா இவர்களை யாருமே ஒன்றுமே செய்ய மாட்டர்கள் என்ற தைரியம்தான்
அந்த காக்கி ய அடிச்சது தப்பு இல்லை. அந்த பயனுக்கு உதவி செய்ய தயார்.
தலைய்யவனே சமூக பொறுப்பற்றவர். அவரெ அடாவடியில் இரங்குமாரு கட்டளை இட்ட ஆள் குண நலன் எப்படி இருக்க முடியும். தல்வனுக்கேஆற்ற வாறு தொண்டர்களும் இறங்குறார்கள்.
சமூக ப்ரோப்பற்ற கட்சி. மக்களுக்கு தேவையற்ற ஒரு அடாவடி ரவுடி கட்சியை. ஒட்டு புல்லு கட்சி. இதைய விஜய் அவர்கள் தட்டி வைக்க வேண்டிய தருணம்.
ஞாயமா பார்த்தா உண்மையிலேயே சோறு திங்கற போலீசா இருந்தா, அதுலயும் உப்பு போட்டு சோறு திங்கற போலீசா இருந்தா மக்கள் வரிப்பணத்துல சோறுதிங்கற போலீசா இருந்தா வெட்டித்தனத்துக்கும் வீண்வம்புக்கும் போராட்டம் செய்த விசிக காரங்களைத்தான் அடிச்சி துரத்தி இருக்கணும். போலீசு என்னிக்கி கட்சிக்காரர்களுக்கு அடியாள் வேலை செய்து சைடுல காசு பார்க்க ஆரம்பித்ததோ அன்னிக்கே பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகிட்டுது.
இந்த அடாவடி போலீசுக்காரனுங்களுக்கு அன்னன்னிக்கு கூலிக்கு வேலைக்கு போறவன் அப்பிராணி சப்பிராணி இவர்களிடம்தான் வீரத்தை காட்டுவானுங்க.. அந்த போலீசுக்காரன் முதலில் அந்த பையனை அடித்ததே தப்பு.. எவர் அடிச்சாலும் வாங்கிட்டு பேசாம போகணுமா? அந்த பையன் திருப்பி அடிச்சது சரிதான்.. இதை எந்த நாதிமன்றமும் கேட்காது. எத்தனை நீதிபதிகள் பார்த்திருப்பார்கள் இந்த விடியோவை. நீதிபதிகள் எல்லாம் வாயில் ... வைத்துக்கொண்டு செல்லுங்கள்.
போலீஸ்காரர்களை திருப்பி அடிப்பது நல்லதல்ல அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் பொதுவாக இளைஞர்கள் எப்போதும் பொறுமை காப்பது மிக நன்று.
ரோட்டில் மறியல் செய்த பொறுக்கிகளின் கட்சி ஆட்சியில் பங்கு . போலீஸ் காரன் , அப்பாவி மக்களை தான் கொடுமை படுத்துவார்கள் . பொறுக்கிகளுக்கு காவல் காப்பார்கள் . ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை . ட்ராவிடிய சித்தாந்தம் இப்படி தான் இருக்கும் .மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு