ஆன்லைன் வர்த்தகம் என ரூ.19.97 லட்சம் மோசடி
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவரிடம் ஆன்லைன் வர்த்தகம் எனக்கூறி ரூ.19.97 லட்சம் மோசடி செய்தவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பெரியகுளத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அஷ்வின் 31. இவருக்கு 'ஸ்நாப் சாட்' சமூக வலைதளத்தில் சிநேகா, ஆதேஷ், கோவிந்த் கட்கரி அறிமுகம் ஆகினர். ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என அஷ்வினிடம் கூறினர். புதிதாக வங்கி கணக்கை துவங்க கூறினர். இதை நம்பிய அஷ்வின், ஜன., முதல் ஏப்., வரை பல தவணைகளாக ரூ.19.97 லட்சத்தை அனுப்பினார். லாபம் ஏதும் கிடைக்கவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. அஷ்வின் புகாரின் பேரில் தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் எதிரொலி: அரசுப் பணியாளர் தேர்வு ரத்து
-
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அதிபர் டிரம்ப் பாராட்டு
-
நிலுவை மனுக்களை ஒரு மாதத்திற்குள் முடிக்க கலெக்டர் சினேகா உத்தரவு
-
சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு
-
லாட்டரி விற்றவர் கைது
-
அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி
Advertisement
Advertisement