காட்டு யானையை கண்காணிக்க குழுக்கள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட மலையோர கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதம் செய்கிறது. பத்துகாணி அருகே மேல கற்றுவா பகுதியில் காட்டு யானை சுற்றி வருகிறது. அப்பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்துவதுடன் விளைப் பொருட்களையும் சேதம் செய்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். இதில் யானை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டு காட்டு யானை நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

Advertisement