விபத்தில் வாலிபர் பலி

ஈரோடு; மொடக்குறிச்சி நாதகவுண்டன்பாளையம் எல்லை நகர் அன்னை தெரசா நகர் தங்கவேல் மகன் மனோரஞ்சன், 23; நசியனுாரில் உள்ள தனியார் அக்ரோ நிறுவன தொழிலாளி. யமஹா பைக்கில் ஆணைக்கல்பாளையம் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே அதிவேகத்தில் வந்த பொலிரோ பிக்-அப் வேன் மோதியது.


இதில் மனோரஞ்சன் படுகாயம் அடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்-லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசா-ரிக்கின்றனர்.

Advertisement