சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு; ஒரே மாதத்தில் 25 பேர் மீது நடவடிக்கை என பட்டியலிட்ட அண்ணாமலை
சென்னை: ''சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது'' என வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.
அவரது அறிக்கை: திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சமூக வலைத்தளங்களில் உங்கள் கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களுக்காக மாற்றுக் கருத்து கொண்ட 25க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, தனது குடும்பத்தை தகாத வார்த்தைகளால் விமர்சித்த தவெக தொண்டருக்கு பதிலளித்த வீ தி லீடர்ஸ் தன்னார்வலர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்திருப்பது கவலைக்குரியது.
சமூக வலைத்தளங்களில் தனிநபர் அவதூறு மற்றும் வரம்பு மீறிய பேச்சுகளை கண்காணிப்பது அவசியம்தான். ஆனால், ஆட்சியையும் ஆளும் கட்சியையும் விமர்சிக்கும் ஒவ்வொரு குரலையும் வழக்கு, கைது என்ற அதிகாரத்தின் மூலம் அடக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் தன்னிச்சையாக செயல்படுவதை நீங்கள் அனுமதிக்கக் கூடாது.
நீங்கள் இன்று ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் பொதுவான முதல்வர். எதிர்க் கருத்துகளும் விமர்சனங்களும் ஜனநாயகத்தின் இயல்பான அங்கங்கள். சிறிய விமர்சனங்களுக்குக்கூட வழக்கு, கைது என்ற போக்கு தொடர்வது துரதிருஷ்டவசமானது. எனவே, இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து, ஜனநாயகக் குரல்களுக்கும் விமர்சனங்களுக்கும் உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை பரபரப்பு அறிக்கை; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
பார்றா? த.வெ.க விசயத்தில் இவ்வளவு நாள் தூங்குனது மாதிரி நடிச்ச நம்ம அண்ணன் திடீர்னு முழிப்பு வந்து இப்ப முழிச்சிக்கிட்டது மாதிரி நடிக்க ஆரம்பிச்சுட்டாரு!
முதலில் எல்லோரும் அரசியல் நாகரீகம் கடை பிடிக்க வேண்டும். சின்னது பெரிது இல்லை விமரிசனத்தில். டீசென்ட்டா பேசறதில் என்ன குறைஞ்சுபோறேங்க. குழந்தைகளையும் நல்ல விதத்துல வளர்க்கலாம்.
RULE TO RULE COMMON TO ALL , wtl என்றால் என்ன கொம்பா இருக்கு அப்புறம் என்ன ,எவிடென்ஸ் இருந்து நிரூபிக்க சொல்லு , நீ அடுத்த கட்சிக்காரனை இப்படி தானே சொல்லுவ
அண்ணாமலை அவர்களே சிறிய விமர்சனம் பெரிய விமர்சனம் என்பதற்கு என்னா அளவுகோல்? நீங்க ஸீட்ல இருந்தால் இதே மாதிரி பேசுவீங்களா? அராஜகமாகவும் எல்லை தாண்டி அருவருப்பாகவும் பேசினால் பதிவிட்டால் நீங்கள் என்னா செய்வீர்கள்? நீங்க தானே விசய்க்கு ஒரு வருஷம் டைம் குடுக்கலாம் ன்னு பேசினீங்க. அருவருப்பாக பேசினவனை ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுடுவீங்களா? அப்புடி பண்ணினால் ஃபைனல்ல என்னா ஆகும், புற்றீசல் மாதிரி எல்லாரும் கிளம்பிடுவான்களே. திருட்டு தீயமுக காரனுங்க வேற காச குடுத்து கிளப்பி விடுவான்களே? நீங்க பேசுவது முற்றிலும் சரின்னு எங்களால ஒத்துக்க முடியலை.
போலீஸ் நிர்வாக சீரமைப்பு என்ற உச்ச நீதி மன்ற ஆலோசனையை உடைப்பில போட்டது காங்கிரஸ் மட்டுமில்ல பாஜபாவும்தான். அரசாங்கங்களுக்கு, எந்த கட்சினாலும் சரி, உள்நாட்டு நடப்பு, போலீஸ், உளவு துறை ..இவை மட்டும் தங்களுக்கு சாதகமாக, நீதிமன்றங்கள் பத்திரிகைகள், விமரிசனங்களுக்கு விலக்காக இருக்க விரும்புகின்றனர். இது மாறவே மாறாது.
சட்டத்தை மீறி அருவெறுப்பாக விமர்சனம் செய்தால் வழக்கு பதிவு செய்யலாம் தவறில்லை, ஆனால் உண்மை என்னவோ அதைப்பற்றி கூறி விமர்சனம் செய்தால் வழக்கு என்பது ஏற்புடையது அல்ல. இன்று இதுபோல சிறு விமர்சனங்களுக்கு கூட வழக்கு பதிவு செய்யும் ஆட்சியாளர்கள், நாளை பதவி இழந்த பிறகு அதற்குண்டான பலனை அறுவடை செய்வார்கள். அது கழிவறையில் ஓடி ஒழிந்தாலும் கர்மா விடாது.
காவல்துறைக்கு முதல்வர் முழுசுதந்திரம் கொடுத்திருக்கின்றார் .ஆனால் காவல்துறை கடந்த 60 வருடங்களாக ஆளும்கட்சியின் கைதுடுப்பாக பயன்படுத்திவந்ததினால் அவர்களுக்கு பழகிப்போய்விட்டது .எப்பதுமே ஆளும்கட்சியினரின் கைத்தடி போன்று செயல்படும் பழக்கத்தை மாறறி செயல்பட தனியாக மறுபயிற்சி அளிக்கவேண்டும் அல்லது ஒட்டுமொத்தமாக ம்மாற்றியமைக்கப்படவேண்டும் .உதாரணத்திற்கு நேற்று நடந்த கூத்து .விடுதலை சிறுத்தைகளில் சாலைமறியலில் சாலையில் பயணிப்போருக்கு உதவிடாமல் காவலர்கள்லே தடுத்து நிறுத்தி அவர்களை அடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று வழக்கு பதிந்தது .அவர்கள் செய்த ஒரே குற்றம் தினம்தினம் பயணிக்கும் சாலையில் பயணித்ததுதான் .இதை அரசு சித்தித்து மாற்றத்தை ஏற்படுத்த ஆவண செய்யவேண்டும் .
விஜய்யை ஆதவ், புஸ்ஸி ஆகியோர் இயக்குகிறார்கள் .... ஆகவே அண்ணாமலை தனது அறிக்கையை அவர்கள் கையில் கொடுக்கலாம் ...
Annamalai sir,
Mr. Vijay has been facing hell lot of critics and personal attacks before and after CM. even in cinema and now in politics. But even you aware there was no hell lot of cases against them. When there is a personal attack, it should have case. Now he is CM which is really respectable position in society. so the position have lot of respect. when people' against that, they should be punishable. no doubt. they no need to be quite
பேச்சுரிமையை ஏற்காத அரசு ஜனநாயகத்தின் எதிரி.
A Murugan, you are writing as uneducated.
சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்.முதல்வரான பின் விஜய் யரையும் 100% நம்பக்கூடாது.மிகவும் அலர்ட்டாக இருக்க வேண்டும். மந்திரிசபையில் அவரை சுற்றியுள்ள முதன்மையானவர்களின் Past records சரியில்லையே..
விஜய் அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் தரவேண்டும் என நீங்கள் கூறி ஒரு வாரம் கூட ஆகவில்லை. இந்த லாட்டரி ஆட்சியும் திராவிஷத்தின் நீட்சி தான் என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளவும். கொசுவுக்கு திருந்த வாய்ப்பளித்தால் மலேரியாவைதான் தரும்.மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு