மாவட்ட பெண்கள் கபடி போட்டி: உடுமலை அணி மூன்றாம் இடம்
உடுமலை: திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம், ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாவட்ட ஆண்கள், பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி, காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில், 15ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. பெண்கள் பிரிவில், 27 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் 20-16 என்ற புள்ளிக்கணக்கில் 'வி ஸ்போர்ட்ஸ்' அணியை வென்றது. உடுமலை வி.ஆர்.டி. அணி 3ம் இடமும், 15 வேலம்பாளையம் இளம்சிட்டுகள் அணி 4ம் இடமும் பெற்றன.
ஆண்கள் பிரிவில், 70 அணிகள் பங்கேற்றன. போட்டிகளை எம்.எல்.ஏ., பாலமுருகன் தொடங்கி வைத்தார்.
ஜெயசித்ரா ஸ்போர்ட்ஸ் கிளப் முதலிடமும், ஜோகோ ஸ்போர்ட்ஸ் கிளப் 2ம் இடமும், ஜி.சி.எம். கபடி குழு 3ம் இடமும், தளவாய்ப்பட்டினம் தமிழன் கபடி குழு 4ம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகை வழங்கப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
Advertisement
Advertisement