சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது; மெட்டாவிடம் தெளிவுப்படுத்திய மத்திய அரசு
புதுடில்லி: மெட்டா நிறுவனம் இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது என்று அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு தெளிவுப்படுத்தி உள்ளது.
மெட்டா நிறுவனத்துடனான கலந்துரையாடலின்போது, மத்திய அரசு கூறியதாவது:
* குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் விவகாரத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
* இந்தியச் சட்டத்தை மீறினால் பாதுகாப்பு வழங்கப்படாது.
* குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான பதிவுகள் குறித்து அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
* சமூக ஊடக தளங்களை தணிக்கை செய்வதோ அல்லது சட்டபூர்வமான பேச்சுரிமையை ஒடுக்குவதோ எங்களின் நோக்கம் அல்ல.
* ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பதிவுகள் மற்றொரு கவலைக்குரிய விஷயமாகும். பயனர்கள் தாங்கள் பார்ப்பது செயற்கையாக உருவாக்கப்பட்டதா அல்லது உண்மையானதா என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், அது தெளிவாகக் குறியிடப்பட வேண்டும்.
* இந்தியாவின் கலாசார சூழலுக்கு ஏற்ப உள்ளடக்கக் கட்டுப்பாட்டை மேம்படுத்துமாறு மத்திய அரசு மெட்டா நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளது.
சட்டமீறல்கள் அல்லது தனிமனித உரிமைகளை மீறுதல் மற்றும் குற்றவியல்க்ளை ஊக்குவித்தல் ,பொருளாதார குற்றங்கள்,பெண்குழந்தைகளுக்கு எதிரான வன்மங்கள் ,சமூகத்திற்கு எதிரான வன்மங்கள் என கணிக்கும் போது பார்வையாளர்கள் ரிப்போர்ட் என்ற குறியீடை கிளிக் செய்தால் காரணங்கள் லிஸ்ட் வரும் .அதை தேர்வுசெய்து அனுப்பினால் அந்தந்த பதிப்புகள் உடனடியாக நீக்குவார்கள் .சில விடீயோக்களில் டாப் ரைட் கார்நேரில் மூன்று புள்ளிகள் இருக்கும் .அதை தேர்வுசெய்து கிளிக் செய்தால் ரிப்போர்ட் லிஸ்ட் வரும் .மக்கள் அதை பயன்படுத்தவேண்டும் .அரசியல் விமர்சனங்களும் நாகரீகமான முறையில் இருக்கவேண்டும் .அநாகரீகம் என்று கருதினால் ரிப்போர்ட் செய்யலாம் .
மிகப் பெரிய ஆளுமை கொண்டவர்களைக் கொண்டு பேசுவது போல ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நிதி முதலீடு பற்றிய வீடியோக்கள் இப்போதும் முகநூளில் வந்து கொண்டிருக்கிறது. இது தவறு என்று தெரியாமலா நிறுவனம் நடத்துகிறார்கள் ? இவர்களை தடை செய்து வைக்க வேண்டும்.
மெட்டாவை முழுமையாக தடை செய்து உள்நாட்டு ZOHO வை ஆதரிக்கலாம்
பதிவு செய்யும் முன் இந்தியாவில் பதிவு எண் மெட்டா நிறுவனம் அல்லது மத்திய தகவல் ஒளி பரப்பு துறை வழங்க முடியாதா? ஏன்?ஏற்கனவே உள்ள பதிவுகளுக்கு பதிவு எண். ஆபாச, வன்முறை தூண்டும் பதிவாளர் பெயர் கட்டாயம் என்றால் அச்சம் இருக்கும். கூகுள் போட்டோவை டிரைவ் அப்லோட் செய்யும் முன் பலவற்றை ஒரு வரி ஃபைல் ஆக மாற்றி விட்டது. எனக்கு தொழில் நுட்பம் தெரியாது. தொழில் நுட்பம் தெரிந்தவர்களுக்கு ஏராள வழி முறை தெரியும். சற்று நேர்வழியில் பணம் பெறுவீர். மத்திய அரசு ஒழுங்குபடுத்த திணறுவது ஏன் ?
இதே பாலிசியை அமைச்சர்களுக்கும் எம்எல்ஏக்களுக்கும் எம்பிக்களுக்கும் அமல்படுத்தலாம்.