அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

செஞ்சி: அரசு மேல்நிலை பள்ளியில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

சங்கீதமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் அனந்தபுரம் ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ரோட்டரி சமுதாயக் குழும முன்னாள் தலைவர் ஜேசு ஜூலியஸ் ராஜா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜோசப் எட்வின் முன்னிலை வகித்தார்.

செஞ்சி அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் அன்பரசன் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து விளக்கி பேசினார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் ஆசிரியர்கள் கதிரவன், கங்காதரன், கிறிஸ்துவ ராஜா, அய்யனார், பிரபு, அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement