உமையநாயகி அம்மன் கோயில் நடை ஒரு மாதத்திற்கு பின் திறப்பு
சாயல்குடி: -ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.தரைக்குடியில் உள்ள உமையநாயகி அம்மன் கோயில் நடை ஒரு மாதத்திற்கு பின் திறக்கப்பட்டது.
சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற உமையநாயகி அம்மன் கோயில் உள்ளது. ஆடி மாதத்தில் அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக செல்வதாக ஐதீகம் உள்ளது. இதனால் கோயில் நடை ஆடி முதல் நாளன்று (ஜூலை 17) அடைக்கப்பட்டது.
நேற்று ஆவணி முதல் பார்வை தரிசனத்திற்காக கோயில் நடை அதிகாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜைக்கு பிறகு அம்மனுக்கு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு
Advertisement
Advertisement