தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று தமிழகம் வருகிறார் அமித் ஷா
சென்னை: தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று தமிழகம் வருகிறார்.
மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாட்டில், தென் மாநில முதல்வர்கள் மாநாடு, மாமல்லபுரம் அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை நடக்கிறது. இதில், தமிழக முதல்வர் விஜய், கர்நாடகா முதல்வர் சிவகுமார், கேரள முதல்வர் சதீசன், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டிற்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையேற்கிறார். ஆறு மாநில தலைமை செயலர் மற்றும் பல்வேறு துறைகளின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதில் பங்கேற்க, இன்று இரவு, டில்லியில் இருந்து தனி விமானத்தில் அமித் ஷா, சென்னைக்கு வர உள்ளார். அங்கிருந்து மாநாடு நடக்க உள்ள நட்சத்திர விடுதிக்கு செல்கிறார்.
அங்கு முதல்வர்களுடனான இரவு விருந்தில் பங்கேற்கிறார். நாளை மாநாட்டில் பங்கேற்ற பின், மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவிலுக்கு செல்கிறார். தரிசனம் முடிந்து, சென்னை சென்று, அங்கிருந்து டில்லி செல்ல உள்ளார்.
இந்நிலையில், அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக காங்., தலைவர் மணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.
என்ன காங்கிரஸ் அமித்ஷாவை எதிர்த்து ஆர்ப்பாட்டமா? பி.பி. ,சுகர் மாத்திரை எல்லாம் நிறைய வாங்கி வச்சுக்குங்க மாணிக் தாக்கூர்,எல்லாருமே 75 வயசுக்கு மேல தான் ஆர்ப்பாட்டத்துக்கு வருவாங்க. அப்புறம் உங்க மேல வீணா பழி வந்துரும்.
திரு ஐயர் அவர்களே முதலில் நீங்கள் உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள் ஏனென்றால் கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்களை போன்றோர் விசில் சின்னத்துக்கு வாக்களித்து அதன் வாயிலாக சிலுவையை அங்கீகரித்தீர்கள்
காவிரியையும் மற்ற நதி பிரச்சனைகளையும் அரசியலாக்கி அதில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் தலையில் குட்டு வைத்து அவர்களை திருத்துங்கள்மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு