அரவக்குறிச்சி வருவாய் வட்டத்தில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' முகாம்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சி வருவாய் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், இன்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில் நடக்கிறது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வருவாய் வட்டத்திற்குட்பட்ட சின்னதாராபுரம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் புதன்கிழமை நடக்கிறது. இதில், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி சின்னதாராபுரம் ஆகிய குறுவட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில், காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை பட்டா மாறுதல் தொடர்பான முகாம் நடைபெற உள்ளது.
மேலும், மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன் தலைமையில், கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

Advertisement