நடவுத்துவரை திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு
கிருஷ்ணராயபுரம்,:கரூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் மல்லிகா வெளியிட்ட அறிக்கை:
கரூர்
மாவட்ட வேளாண்மைத்துறை சார்பில், தேசிய வேளாண்மை வளர்ச்சி
திட்டத்தின் கீழ் காலநிலைக்கேற்ப தாங்கி வளரக்கூடிய
நடவுத்துவரை திட்டம் மானிய விலையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், துவரை விதைகள், உயிர் உரங்கள், நுண்ணுாட்ட கலவை,
உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், விவசாயிகளுக்கு, 50 சதவீதம்
மானியத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் குழித்தட்டு
முறையில் துவரை விதைகள் வளர்க்கப்பட்டு பின்னர் வயலில் நடவு
செய்யப்படும்.
மேலும், குழித்தட்டுகள் வாங்குதல், உழவு மானியம்,
நடவு கூலி, டி.ஏ.பி., தெளிப்பு, நுணி கிள்ளுதல் ஆகியவற்றிற்கு, 50
சதவீதம் பின்னேற்பு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டம், கரூர்
மாவட்டத்தில் தாந்தோணி, குளித்தலை, தோகைமலை, கடவூர்,
கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு
வருகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வேளாண்
விரிவாக்க மையங்களை அணுகி இடுபொருட்கள் மற்றும் தொழில்நுட்ப
அறிவுரைகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
அனைத்து எம்எல்ஏக்களுக்கு கார், உதவியாளர்; முதல்வர் விஜய் அறிவிப்பு
-
கோல்கட்டாவில் தங்கும் விடுதியில் தீ; வங்கதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உடல்கருகி பலி
-
திருத்தப்பட்ட மேகதாது அணை திட்ட அறிக்கை; மத்திய நீர் ஆணையத்திடம் கர்நாடகா அரசு சமர்ப்பிப்பு
-
அரசு வங்கிகள் இளம் தலைமுறையினர் மீது கவனம் செலுத்த வேண்டும்; நிர்மலா சீதாராமன்
-
அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருந்த இந்திய பெண் சிறைபிடிப்பு; சட்டப்போராட்டத்தை நடத்தும் குடும்பம்
-
மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தது முடிவு; ரத்து செய்யப்பட்ட 44 தேர்வுகளின் பட்டியலை ஜார்க்கண்ட் அரசு வெளியீடு