11 மதுபான தடை நீக்க விவகாரம்; நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்

6


கோவை: மதுபானங்கள் மீது தடை விதித்து பின் உத்தரவு திரும்ப பெற்ற விவகாரத் தில், பல்வேறு கேள்விகள் எழுவதால், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசா ரணை நடத்த வேண்டுமென, பொது சுகாதாரத்துறை முன் னாள் இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்தார்.

'என்ரிக்கா என்டர்பிரைசஸ்' நிறுவனத்துக்கு சொந்தமான, பூந்தமல்லியில் உள்ள மதுபான ஆலையில், சமீபத்தில் ஆய்வு செய்த, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள், 11 வகையான மதுபானங்களை தடை செய்த னர். பின்னர் அந்த உத்தரவு திரும்ப பெறப்பட்டது.

இதில், சேவை குறைபாட்டை மேம்படுத்துவதாக அந்நிறுவனம் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், தடை நீக்கப் பட்டதாக தெரிவித்துள்ளது.
செயற்கை சுவையூட்டிகள் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,ஆய்வு முடிவுகள் வெளியிடாததோடு, அடுத்தகட்டபரிசோதனைக்கும் உட்படுத்தாமலே, தடை நீக்கியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகத்தில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மது விற்பனை நடக்கிறது. மதுபானங்கள் உணவு பட்டியலில் இருப்பதால், அவற்றின் தரம் பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

மத்திய உணவு பாதுகாப்பு மற்றும்தர நிர்ணய ஆணையம், 2011ல் கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போதுவரை மதுபான ஆலைகளில் நடத்திய சோதனை விபரங்கள், பரிசோதனைக்கு அனுப்பிய மாதிரிகள், அதன் முடிவுகள் குறித்து வெளியிட வேண்டும்.

மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில், தரமற்ற மருந்துகள் ஆய்வு செய்து அவற்றை தடை செய்வதோடு, அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுகிறது. இதேபோல, உணவு பாதுகாப்பு துறையும் மது வகைகளை ஆய்வுசெய்து, தரமற்றதை தடை செய்ய வேண்டும்.

த.வெ.க., அரசு போதையில்லா தமிழகத்தை வலியுறுத்தி வருகிறது. 11 மதுபான வகைகளுக்கும் எதன் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டது, பின் உத்தரவு திரும்ப பெற்றதன் பின்னணி என்ன என்பது குறித்து, நீதிமன்றமே தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

Advertisement