சலவை தொழிலாளர்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கை

புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ராஜகுலத்தோர் நல சங்கம் சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;

வண்ணார் சாதி பெயரை ராஜகுல சாதி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானமாக அரசு நிறைவேற்ற வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது. 

அப்போது, சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்தாபலராமன், துணை தலைவர் வரதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement