சலவை தொழிலாளர்கள் உள் ஒதுக்கீடு கோரிக்கை
புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என, முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி ராஜகுலத்தோர் நல சங்கம் சார்பில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;
வண்ணார் சாதி பெயரை ராஜகுல சாதி என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு மற்றும் சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வரும் சட்டசபை கூட்டத்தொடரில் தீர்மானமாக அரசு நிறைவேற்ற வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, சங்க தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்தாபலராமன், துணை தலைவர் வரதன் ஆகியோர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆதரவற்ற மகளிர் நலனுக்கு இணையதளம் உறுப்பினராக சேர்ந்து பயன்பெற அழைப்பு
-
சாலையில் குழியால் விபத்து அபாயம்
-
பழுதான டேங்கர் லாரியில் போக்குவரத்து பாதிப்பு
-
இலவச மனைப்பட்டா பேச்சுவார்த்தையால் நடக்க இருந்த காத்திருப்பு போராட்டம் ரத்து
-
காவிரி பாலம் அருகே மருத்துவ கழிவு கொட்டியுள்ளதால் சுகாதார சீர்கேடு
-
அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான நிரந்தர இடத்திற்கு மாற்றக்கோரி முற்றுகை
Advertisement
Advertisement